Skip to content
Thursday, June 5
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை
  • இந்தியாவை முழுமையான கூட்டரசாக மாற்றுக!
  • மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  • பெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
  • புரசைவாக்கம், திடீர்நகர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை ஓராண்டிற்குள்ளாவது நிறைவேற்ற வேண்டும்!
Home>>அரசியல்>>பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுவிக்க கோரிக்கை – த. வா. க
அரசியல்செய்திகள்தமிழ்நாடு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுவிக்க கோரிக்கை – த. வா. க

Senthil KumaranAugust 6, 2021 229 Views0

உச்சநீதி மன்றத்தின் புதிய தீர்ப்பின் அடிப்படையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

கடந்த 03.08.2021 அன்று, அரியானா மாநிலத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவரின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அவ்வழக்கில் முக்கியமான தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

அதாவது,அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 கீழ் மாநில அரசு தண்டனைக் குறைப்பு வழங்க முழு அதிகாரம் கொண்டிருக்கிறது. ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு இங்கு செயல்பட முடியாது. தொடர்புடைய மாநில அரசின் பரிந்துரை ஆளுநரை கட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்தது. தண்டனைக் குறைப்பு குறித்து மாநில அமைச்சரவை பரிந்துரை அளிக்கும் போது ஆளுநர் அதற்கு கட்டுப்பட்டு கையெழுத்திட வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பின் படி, பேரறிவாளன் உள்ளிட்ட ஈழ தமிழர்களை விடுதலை செய்வதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161-வது பிரிவின் படி, மாநில ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று கடந்த 2018இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அத்தீர்ப்பின் அடிப்படையில், அப்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அத்தீர்மானத்தை மதிக்காத ஆளுநர், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டினார். பின்னர், திமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், அரசியல் இயக்கங்களும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, காலம் கடந்து குடியரசுத்தலைவருக்கு தீர்மானத்தை அனுப்பி வைத்தார் ஆளுநர்.

இந்த நிலையில், ஆயுள் தண்டனை கைதி ஒருவரின் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, 7 தமிழர் வழக்கிற்கும் பொருந்தும்.

எனவே, மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், அமைச்சரவையை கூட்டி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யும் வகையில் தீர்மானத்தை நிறைவேற்றி தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

செய்தி சேகரிப்பு:
இரா. செந்தில்குமரன்,
மன்னார்குடி

Share:

Previous Post

தமிழ் அர்ச்சனையைக் கட்டாயமாக்க வேண்டும்!

Next Post

திருவள்ளுவரின் எழுத்துநடை

Related Articles

செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிமருத்துவம்

இதயத் துடிப்பை மீண்டும் கொடுத்த சகோதரி…

இந்தியாகாவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

தமிழ்நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைதூக்குவதை அனுமதிக்க கூடாது!

செய்திகள்தமிழ்நாடு

கொளத்தூரில் வீடுகளை முறையான அறிவிப்பின்றியும் இடிப்பதை எதிர்த்து மக்கள் போராட்டம்.

செய்திகள்

தமிழகத்தின் முதல் காகிதமில்லா நிதிநிலை அறிக்கை

அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

காவிரிப்படுகையில் 60,000 ஏக்கரில் நெல் பயிர் பாதிப்பு: இழப்பீடு வழங்க வேண்டும்!

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை
  • திறவுகோல் 2056 வைகாசி மின்னிதழ்
  • இந்தியாவை முழுமையான கூட்டரசாக மாற்றுக!
  • மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  • திறவுகோல் 2056 சித்திரை மின்னிதழ்
  • ஐதராபாத்தில் 400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்!
  • பெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
  • புரசைவாக்கம், திடீர்நகர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை ஓராண்டிற்குள்ளாவது நிறைவேற்ற வேண்டும்!
  • தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து முதல்வர் சிந்திக்க வேண்டும்.
  • தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் ஐயா சொல்லின் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் மறைவு

வேளாண்மை

மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியை காக்க கோரி பேரணி

மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியை காக்க கோரி பேரணி.

adminOctober 18, 2024
மன்னார்குடி நம்மாழ்வார் ஏரி

நம்மாழ்வார் குளம்தான் 1950, 60களில் மன்னையின் தெருக்களுக்கு குடிநீர் வழங்கியது.

adminOctober 17, 2024

எல்லா வளங்களையும் அழித்து விட்டு என்ன தொழில் வளர்ச்சி?

adminSeptember 15, 2024

முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு உரிமையை காக்க வேண்டும்!

adminAugust 15, 2024
ஐயா மணியரசன்

காவிரி நீரைப் பெற்றுத் தர மாற்று வழியை தமிழ்நாடு அரசு நாட வேண்டும்.

adminJuly 17, 2024

சமீபத்திய பதிவுகள்

  • பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை
  • திறவுகோல் 2056 வைகாசி மின்னிதழ்
  • இந்தியாவை முழுமையான கூட்டரசாக மாற்றுக!

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு