Skip to content
Thursday, June 5
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை
  • இந்தியாவை முழுமையான கூட்டரசாக மாற்றுக!
  • மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  • பெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
  • புரசைவாக்கம், திடீர்நகர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை ஓராண்டிற்குள்ளாவது நிறைவேற்ற வேண்டும்!
Home>>அரசியல்>>பஞ்சாப் முதல்வர் துப்புரவு தொழில் செய்தவர் என்று சொல்ல காரணம் என்ன?
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

பஞ்சாப் முதல்வர் துப்புரவு தொழில் செய்தவர் என்று சொல்ல காரணம் என்ன?

adminSeptember 21, 2021 499 Views0

ஆசிரியர் மானமிகு கி.வீரமணி ஐயா அவர்களுக்கு வணக்கம்!

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் பட்டியல் பிரிவில் உள்ள ராமதாசிய சமூகத்தை சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி என்பவரை புதிய முதலமைச்சராக காங்கிரஸ் கட்சி தலைமை வாய்ப்பு வழங்கி உள்ளது. இதற்கு இதுதொடர்பாக நாடு முழுவதிலிருந்தும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவருக்கு வாய்ப்பு வழங்கியதற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தாங்களும் இதை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளீர்கள். ஆனால் யாரும் சுட்டிக்காட்டாத வகையில் துப்புரவு
தொழில் செய்து கொண்டு இருந்த ஒருவரை முதலமைச்சர் ஆக்கி உள்ளது போல் கூறி உள்ளது அவரையும் அச்சமூகத்தை இழிவுபடுத்துவது போலவும் உள்ளது. இது என்னை போன்ற பலருக்கு மன உலைச்சல் தருகிறது. தங்கள் மீதான மதிப்பு குறைதல் ஏற்படுமோ என வருந்துகிறோம்.

தற்போது முதல்வராக பொறுபேற்க உள்ள சரண்ஜித் சிங் சன்னியை துப்புரவு தொழில் செய்தவர் என்று சொல்ல காரணம் என்ன? அவர் எப்போது துப்புறவு தொழில் செய்தார் என்று சொல்ல முடியுமா? சரண்ஜித் சிங்கின் தந்தை ஹர்சா சிங் ஊராட்சித் மன்ற தலைவராகவும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்தவர் என்பது தெரியுமா உங்களுக்கு?

குப்பை கூட்டி கொண்டு இருந்தவரை முதலமைச்சர் ஆக்கவில்லை அவரது அப்பா உள்ளாட்சி அமைப்பில் ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர் என மக்கள் பிரதிநிதியாக தேர்தெடுக்கு பட்டு பொதுவாழ்வில் இருந்தவர், அவர் வழியில் அவரது மகனான தற்போதய முதல்வர் சரண்ஜித் சிங் பள்ளியிலே மாணவ தலைவராகவும் இருந்தவர், சண்டீகரில் உள்ள ஸ்ரீ குரு கோவிந்த் சிங் கல்லூரியில் அவர் இளங்கலையும் பின்னர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பையும் முடித்தார். பிறகு பஞ்சாப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்-ஜலந்தரில் எம்பிஏ படிப்பு முடித்தவர்.

இதுமட்டுமல்லாமல் சரண்ஜித் சிங் கவுன்சிலர் பதவியில் மூன்று முறை இருந்திருக்கிறார். அவர் காரர் முனிசிபல் கவுன்சில் தலைவராகவும் இருந்திருக்கிறார். 2007 ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிஸ் கட்சி வாய்ப்பு வழங்காத நிலையில் சுயேச்சையாக போட்டியிட்டு முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார், அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் 2012 ஆண்டு நடைபெற்ற சட்டபேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றார். 2015_2016 சட்டமன்ற எதிர்கட்சி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். 2017 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக சட்டபேரவை உறுப்பினர் ஆனதோடு தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார், அடுத்த சட்டப்பேரவை தேர்தலுக்கு 8 மாதங்களே உள்ள நிலையில் தற்போது முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

இத்தகைய பின்னனி கொண்ட ஒருவரை துப்புரவு பணி செய்து கொண்டு இருந்தவர் என்று சுட்டிகாட்ட வேண்டிய அவசியம் என்ன? பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என சொல்ல விருப்பம் இல்லை என்றால் வழக்கம்போல ஒடுக்கபட்ட, பிதுக்கபட்ட நசுக்கபட்ட, கசக்கபட்ட, நொருக்கபட்ட சமூகத்தை சேர்தவர் என்றோ, தலித் என்றோ குறிப்பிட வேண்டியது தானே? இந்த அறிக்கையில் உயர் சாதி, தாழ்ந்த சாதி பதங்களை பயன்படுத்தி உள்ளீர்கள் இதைபற்றி சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் துப்புரவு தொழிலை செய்து கொண்டு இருந்தவர் என்று சொல்ல காரணம் என்ன? அவர் எப்போது துப்புறவு பணி செய்தார் என்று சொல்லுங்கள் இல்லையே உங்கள் கருத்திற்கு வருத்தம் தெரிவித்து திரும்ப பெறுங்கள். ராமதாசிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை அப்படி சொல்கிறீர்களா அப்படிச் சொன்னால் அது ஏற்புடையதாக என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

பல்வேறு அரசியல் காரணங்களை கருத்தில் கொண்டு பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் ஆக்கி இருந்தாலும் கூட இந்த நிகழ்வு வரவேற்க தக்கது. அதே நேரத்தில் மூன்றுமுறை சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சர் எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவை துப்புரவு தொழிலாளர் என்கிற ரீதியல் உங்களின் இது போன்ற கருணைமிக்க வர்த்தைகள், பச்சாதாபங்கள் அச்சமூகத்தினரை சொல்லாமல் கொள்கிறது . மேலும் தமிழகத்தில் துப்புறவு பணியாளர்களை தூய்மை பணியாளர்கள் என்று அழைக்க அரசாணையே வெளிட்டுள்ள நிலையில் தாங்கள் இன்னும் மேட்டிமையோடு வார்த்தைகளை பயன்படுத்துவது ஏற்புடையதல்ல.

நன்றி.

தோழமையுடன்
கா.லெனின்பாபு
20/09/2021

Share:

Previous Post

மன்னார்குடி வ.உ.சி. சாலை விபத்தில் பலியான பெண்மணி

Next Post

எட அன்னவாசலில் மியாவாக்கி குறுங்காடு

Related Articles

இந்தியாகாவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

உயர்நீதிமன்றத்தில் தமிழ்: சட்டமன்றத்தில் புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!

அரசியல்செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

மன்னார்குடியில் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் திமுகவினர் ரகளை – இராம. அரவிந்தன் கடும் கண்டனம்.

அரசியல்செய்திகள்தமிழ்நாடு

முதலமைச்சர் அலுவலகம் வேறு விதமாகவும் செய்தி வெளியிட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல்கல்விசெய்திகள்தமிழ்நாடு

ஆட்சி பீடத்தின் பலியாடுகளா அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும்?

அரசியல்இந்தியாகல்விகாவல்துறைசெய்திகள்தமிழ்நாடுபெண்கள் பகுதி

மாணவி ஸ்ரீமதியின் சந்தேக மரணம்… மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும்.

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை
  • திறவுகோல் 2056 வைகாசி மின்னிதழ்
  • இந்தியாவை முழுமையான கூட்டரசாக மாற்றுக!
  • மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  • திறவுகோல் 2056 சித்திரை மின்னிதழ்
  • ஐதராபாத்தில் 400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்!
  • பெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
  • புரசைவாக்கம், திடீர்நகர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை ஓராண்டிற்குள்ளாவது நிறைவேற்ற வேண்டும்!
  • தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து முதல்வர் சிந்திக்க வேண்டும்.
  • தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் ஐயா சொல்லின் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் மறைவு

வேளாண்மை

மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியை காக்க கோரி பேரணி

மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியை காக்க கோரி பேரணி.

adminOctober 18, 2024
மன்னார்குடி நம்மாழ்வார் ஏரி

நம்மாழ்வார் குளம்தான் 1950, 60களில் மன்னையின் தெருக்களுக்கு குடிநீர் வழங்கியது.

adminOctober 17, 2024

எல்லா வளங்களையும் அழித்து விட்டு என்ன தொழில் வளர்ச்சி?

adminSeptember 15, 2024

முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு உரிமையை காக்க வேண்டும்!

adminAugust 15, 2024
ஐயா மணியரசன்

காவிரி நீரைப் பெற்றுத் தர மாற்று வழியை தமிழ்நாடு அரசு நாட வேண்டும்.

adminJuly 17, 2024

சமீபத்திய பதிவுகள்

  • பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை
  • திறவுகோல் 2056 வைகாசி மின்னிதழ்
  • இந்தியாவை முழுமையான கூட்டரசாக மாற்றுக!

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு