Home>>அரசியல்>>மக்கள் பணத்தைத் திருடுகிறவர்கள் யாராவது காவல்நிலையக் கழிப்பறைகளில் இதுவரை வழுக்கி விழுந்திருக்கிறார்களா?
அரசியல்இந்தியாகாவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

மக்கள் பணத்தைத் திருடுகிறவர்கள் யாராவது காவல்நிலையக் கழிப்பறைகளில் இதுவரை வழுக்கி விழுந்திருக்கிறார்களா?

காவல்துறை அதிகாரிகள் கவனத்திற்கு…


கள்ளக்குறிச்சி சக்தி பள்ளியில் கடந்த பத்தாண்டுகளில் எப்போதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிகள் நடைபெற்றன. அவற்றில் யார் யார் பங்கேற்றார்கள் என்கிற விபரங்களை காவல்துறை பட்டியலிட்டு பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இப்போது கலவரத்தில் ஈடுபட்டவர்களில் எத்தனை பேர் அந்த பயிற்சிகளில் பங்கேற்றார்கள் என்றும் பரிசீலிக்க வேண்டும்.

கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள், சிறுவர்களை நிரந்தர குற்றவாளிகளாக்கும் அல்லது அழித்தொழிக்கும் நோக்கத்தில் செயல்படாமல், காவல்துறை அவர்களை சீர்திருத்தும் முறையில் மட்டுமே இயங்க வேண்டும். அவர்களில் சிலர் ஏற்கனவே “கழிப்பறையில் வழுக்கி விழுந்தார்கள்” என்று சொல்லி உடைந்த கை, கால்களுடன் செய்திகளும், படங்களும் வெளிவருகின்றன. சட்டத்தின் ஆட்சியில் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

லஞ்ச லாவண்யத்தில் திளைக்கும் அரசு அதிகாரிகள், ஊழல் அரசியல்வாதிகள், மக்கள் பணத்தைத் திருடுகிறவர்கள் யாராவது காவல்நிலையக் கழிப்பறைகளில் இதுவரை வழுக்கி விழுந்திருக்கிறார்களா? கிடையாது. தயவுசெய்து இளைஞர்களை அழிக்காதீர்கள்.



சுப. உதயகுமாரன்,
நிறுவனர்,
பச்சைத் தமிழகம் கட்சி.
யூலை 19, 2022.

Leave a Reply