Home>>இந்தியா>>மன்னார்குடி நடுநிலைப் பள்ளியில் விடுதலை நாள் விழா
இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடு

மன்னார்குடி நடுநிலைப் பள்ளியில் விடுதலை நாள் விழா

கொரோனா காலம் என்பதால், மாணாக்கர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த ஆண்டு விடுதலை நாளை கடந்த ஆண்டுகள் போல கொண்டாட இயலவில்லை. இருப்பினும் மன்னார்குடி அரிமா சங்கத்துடன் இணைந்து இயன்ற அளவு விடுதலை நாளை கொண்டாடினோம் என்று அதன் தலைமை ஆசிரியர் மா.தேவி அவர்கள் நம் திறவுகோல் ஊடகவியாளரிடம் தெரிவித்துள்ளார். அவர் தரப்பில் பகிர்ந்த கூடுதல் விவரங்களை கீழே பகிர்ந்துள்ளோம்.


இன்று (15.08.20) மன்னார்குடி நடுநிலைப்பள்ளியில் (கோபாலசமுத்திரம்) அரிமா சங்கத்துடன் இணைந்து விடுதலை நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நிகழ்வில் மருத்துவர்கள் அரிமா அசோக்குமார், அரிமா தர்மராஜன், நிகழாண்டின் தலைவர் அரிமா சௌரிராஜன், செயலர் அரிமா உஷா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் முன் களப் பணியாளர்களான மருத்துவர்களையும், தூய்மைப் பணியாளர்களையும் கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.

Leave a Reply