Home>>தமிழ்நாடு>>மன்னார்குடி கபிலன் நினைவு அறக்கட்டளை சார்பாக ரத்ததான முகாம் நடைப்பெற்றது
தமிழ்நாடு

மன்னார்குடி கபிலன் நினைவு அறக்கட்டளை சார்பாக ரத்ததான முகாம் நடைப்பெற்றது

கபிலன் நினைவு அறக்கட்டளை சார்பாக மன்னார்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.சீனிவாசன் அவர்களின் மகன், மறைந்த கபிலன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கபிலன் அவர்களின் நண்பர்கள் ஏற்பாடு செய்த ரத்ததான முகாம் மன்னார்குடி நகராட்சி மாடல் நடுநிலை பள்ளியில் இன்று நடைபெற்றது.

இந்த இரத்த தான முகாமில் 67 நபர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். இரத்த தானம் வழங்கிய அனைவரும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் இரத்த கொடையாளர் ஒருங்கிணைப்பு மையத்தில்.

தங்களை இரத்தக் கொடையாளராக பதிவு செய்துகொண்டு எதிர்காலத்திலும் அவசர தேவைக்கு இரத்ததானம் செய்ய முன் வருவோம் என உறுதியளித்து இரத்த கொடையாளர் ஒருங்கிணைப்பு மையத்துக்கான விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர்.

இதனை முன்னாள் நகர்மன்றத் தலைவர் திரு சிவா ராஜமாணிக்கம் அவர்கள், முன்னாள் எம்எல்ஏ திரு சீனிவாசன் அவர்கள் முன்னிலையில். அரசு மருத்துவமனை ரத்த கொடையாளர் ஒருங்கிணைப்பு மைய பொறுப்பாளர் செங்குருதி திரு. கார்த்திகேயன் அவர்களிடம் ஒப்படைத்ததார்.

இந்த நிகழ்வில் இரத்த கொடையாளர் ஒருங்கிணைப்பு மைய மேற்பார்வையாளர் ஹரிகிருஷ்ணன்
நேசக்கரம் ஒருங்கிணைப்பாளர்கள் R.V. ஆனந்த், ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply