Home>>அரசியல்>>திருக்குவளையில் உதயநிதியை கைது செய்து பிறகு விடுதலை செய்தது காவல்துறை.
அரசியல்தமிழ்நாடு

திருக்குவளையில் உதயநிதியை கைது செய்து பிறகு விடுதலை செய்தது காவல்துறை.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி வருகின்றன. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி ஆயத்தமாகி வருகிறது.

ஆளுங்கட்சியான அதிமுகவும் தேர்தல் வேலைகளை தொடங்கியுள்ள நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என திமுக தேர்தல் பணியை முன்கூட்டியே வேகமாக தொடங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக திமுக முக்கிய தலைவர்கள் அடுத்த 75 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரப்புரை செய்ய முடிவுசெய்துள்ளனர்.

திமுகவின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் பரப்புரையை ஜனவரியிலும், மகளிர் அணி தலைவி கனிமொழி இம்மாத இறுதியிலும் தொடங்க உள்ள நிலையில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் பரப்புரையை இன்று மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் இல்லத்திலிருந்து தொடங்க முடிவு செய்தார்.

இந்நிலையில் கொரோனா விதிமுறைகளில் அரசியல் பொதுக்கூட்டத்திற்கு தடை உள்ள நிலையில் பரப்புரை மேற்கொண்டதால் திருக்குவளையில் உதயநிதியை கைது செய்து பிறகு விடுதலை செய்தது காவல்துறை.


செய்தி சேகரிப்பு:
ஆனந்த், முத்துப்பேட்டை.

Leave a Reply