Home>>உலகம்>>முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
உலகம்செய்திகள்தமிழ்நாடு

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

ஈழத்தில் மக்களுக்காகவும், உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவும் தங்கள் உயிரை இழந்த மாவீரர்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் தமிழகத்திலும் பல ஊர்களில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இன்று தமிழகத்தில் உள்ள (27/11/2020) தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில், “மாவீரர் நினைவேந்தல்” நிகழ்வு நடைபெற்றது. அதில் நூற்றுக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் கலந்துக்கொண்டு வீரமரணம் அடைந்தவர்களுக்கு நினைவேந்தல் செய்தனர்.

இதில் தமிழ்த்தேசிய பேரியக்கம் தலைவர் ஐயா. மணியரசன், மன்னார்குடி இருதய மருத்துவர் ஐயா. பாரதிச்செல்வன் போன்ற பலர் கலந்துக்கொண்டார்கள்.


செய்தி சேகரிப்பு:
இராசசேகரன், மன்னார்குடி.
பிரசன்னா, மன்னார்குடி.

Leave a Reply