கொரோனா பேரிடர் காலம் என்பதால் பல இடங்களில் மே 18 நினைவேந்தலை முன்புபோல் பல தமிழ் இயக்கங்களால் ஒருங்கிணைக்க இயலாமல் போனது என்பதே உண்மை. ஆனால் இம்முறை பலரும் தங்கள் வீடுகளில் இருந்தவாறே முள்ளிவாய்க்கால் ஈகியர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினார்கள்.
தமிழ் ஈழத்தில் இன அழிப்பு நோக்கத்தில் லட்சக்கணக்கானவர்களை இறுதிக்கட்ட போரில் படுகொலை செய்த சிங்கள அரசை கண்டிக்கும் வண்ணமும், அடுத்த தலைமுறைக்கு தமிழர்கள் எதிர்கொண்ட சவால்கள், பாதிப்பை உணர்த்தும் வண்ணமும் 12ஆம் ஆண்டு நினைவேந்தலை தமிழகத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கானவர்களின் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வீர வணக்கம் செலுத்தினர்.
அதன் ஒளிப்படங்களை தங்கள் பார்வைக்கு கீழே பகிர்ந்துள்ளோம்.
—
செய்தி உதவி:
நிரஞ்சன், மன்னார்குடி.



































