Home>>மன்னார்குடி>>மன்னார்குடியில் சிட்டி யூனியன் வங்கி வழங்கிய அவசர ஊர்தி செயல்படத் தொடங்கியது.
மன்னார்குடிமருத்துவம்

மன்னார்குடியில் சிட்டி யூனியன் வங்கி வழங்கிய அவசர ஊர்தி செயல்படத் தொடங்கியது.

நேசக்கரம் அமைப்புக்கு சிட்டி யூனியன் வங்கி வழங்கிய அவசர ஊர்தியை கடந்த 11.9.2021 அன்று சிட்டி யூனியன் வங்கி முதன்மை மேலாளர்களில் ஒருவரான கிருஷ்ணன் மற்றும் சேவை சங்க தலைவர்கள் முன்னிலையில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. TRB. ராஜா அவர்கள் மக்களுக்கு அர்ப்பணித்த நிலையில் இன்று 15.9.2021 முதல் செயல்படத் தொடங்கியது.

அதையொட்டி மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி தாளாளர் திரு.டி.பி.இராமநாதன் அவர்கள், ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் செந்தில்குமார் ஈஸ்வரி டிராவல்ஸ் உரிமையாளர் அருள் பாலாஜி ஆகியோர் பந்தலடியில் உள்ள நேசக்கரம் அலுவலகத்தின் முன்பு நேசக்கரம் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வைக்கப்பட்டுள்ள அடிப்படை மருத்துவ உதவிப் பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நேசக்கரம் அவசர ஊர்திக்கு முதன் முதலாக டீசல் நிரப்பி கொடுத்து, அவசர ஊர்தி ஓட்டுனர் திரு.குமார் அவர்களுக்கு சால்வை அணிவித்து தேசிய மேல்நிலைப் பள்ளி தாளாளர் திரு. டி.பி. இராமநாதன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் நேசக்கரம் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் என். இராஜப்பா, நேசக்கரம் அவசர ஊர்தி வாகன பொறுப்பாளர் பாரதிதாசன், மன்னார்குடி வர்த்தக பிரமுகர் தனம். நாராயணன், ஒருங்கிணைப்பாளர் பிரகதீஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.


செய்தி உதவி:
நேசக்கரம்.
9600 616 717

Leave a Reply