Home>>செய்திகள்>>திருத்துறைப்பூண்டி வளவனாற்றில் வெங்காய தாமரை அகற்றும் பணி
திருத்துறைப்பூண்டி வளவனாற்றில் வெங்காய தாமரை அகற்றும் பணி
செய்திகள்தமிழ்நாடு

திருத்துறைப்பூண்டி வளவனாற்றில் வெங்காய தாமரை அகற்றும் பணி

திருத்துறைப்பூண்டி வளவனாற்றில் வெங்காய தாமரை அகற்றும் பணியை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள், ஒன்றியப் பெருந்தலைவர் அ.பாஸ்கர் அவர்கள் பார்வையிட்டனர்.

திருத்துறைப்பூண்டி நகரம் மற்றும் சுற்று பகுதி கிராமங்களின் வடிகாலாக உள்ள வளவனாற்றில் வெங்காய தாமரை மற்றும் புதர்களால் நீர்தேங்கியதை அடுத்து திருத்திறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து பொதுபணித்துறை அதிகாரிகள் மூலம் துரித பணியினை மேற்கொண்டு இன்று (08/11/2021) ஜேசிபி எந்திரம் மற்றும் ஆட்களை மூலம் வெங்காயதாமரை மற்றும் புதர்களை அகற்றும் பணி நடைபெற்றது.

இந்த பணியினை திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து, திருத்துறைப்பூண்டி ஒன்றிய பெருந்தலைவர் அ.பாஸ்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


தோழர். கா. லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.

Leave a Reply