Home>>செய்திகள்>>மழை நீரால் சூழப்பட்ட புளியந்தோப்புப் பகுதியில் தொடர்ந்து துயர் துடைப்புப் பணிகள்!
நீரால் சூழப்பட்ட புளியந்தோப்புப் பகுதியில் தொடர்ந்து துயர் துடைப்புப் பணிகள்!
செய்திகள்தமிழ்நாடு

மழை நீரால் சூழப்பட்ட புளியந்தோப்புப் பகுதியில் தொடர்ந்து துயர் துடைப்புப் பணிகள்!

சென்னையில் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பல பகுதிகளில் இன்னும் முழுமையாக தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. வடசென்னையின் புளியந்தோப்புப் பகுதியில் இடுப்பளவு நீரில் தங்கள் இல்லங்களில் மக்கள் பெருமளவு தவித்து வருகின்றனர். அங்கு நேற்று முன்தினம் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் துயர் துடைப்புப் பொருட்கள் வழங்கப்பட்டன. இன்று (12.11.2021), அப்பகுதியிலுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதி – 77ஆவது வார்டில் வரும், புளியந்தோப்பு பகுதியின் இராஜா தோட்டத்தின் பல வீதிகள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளன. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர் க. அருணபாரதி, சென்னை நடுவண் கிளைச் செயலாளர் தோழர் மு. வடிவேலன், தோழர் இராகுல் ஆகியோர் நேரில் சென்று இப்பொருட்களை மழையால் சூழப்பட்ட வீடுகளில் உள்ள மக்களுக்கு வழங்கினர். சமூக செயல்பாட்டாளர் தோழர் ஜீவரத்தினம் இதற்கான பணிகளை ஒருங்கிணைத்தார்.

தொடர்ந்து இப்பகுதியில் மழை நீர் வெளியேற்றப்படாமல் உள்ளதால், பல தெருக்களில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது. கழிவு நீரும் அதில் கலந்துள்ளது. உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைக்காக மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு, இதுபோன்ற பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்துச் செயலாற்றி, மக்களை பாதிப்பிலிருந்து மீட்க முன்வர வேண்டும்!

தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள பள்ளி மாணவர்களுக்கு சில உதவிகளை மேற்கொள்ள தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுக்கும் துயர் துடைப்புப் பணிக்கு பங்களிப்பு செய்ய விரும்புவோர் 9841949462, 9840848594 ஆகிய எண்களுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்!


செய்தி உதவி:
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Leave a Reply