Home>>அரசியல்>>நீடாமங்கலம் சிபிஐ ஒன்றியச் செயலாளர் படுகொலையை கண்டித்து கோட்டூரில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடி

நீடாமங்கலம் சிபிஐ ஒன்றியச் செயலாளர் படுகொலையை கண்டித்து கோட்டூரில் கண்டன ஆர்ப்பாட்டம்.

நீடாமங்கலம் சிபிஐ ஒன்றியச் செயலாளர் படுகொலையை கண்டித்து கோட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச்செயலாளர் திரு. வை. சிவபுண்ணியம் மற்றும் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் பங்கேற்றார்கள்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் தோழர் நடேச.தமிழார்வன் கடந்த 10/11/2021 அன்று காட்டுமிராண்டிகளால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலையை கண்டித்து கோட்டூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த கண்ட ஆர்பாட்டத்தில் திருவாரூர் மாவட்டச்செயலாளர் வை.சிவபுண்ணியம், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து, கோட்டூர் ஒன்றிய பெருந்தலைவர் மணிமேகலை முருகேசன், ஒன்றிய செயலாளர்(பொ) எம்.செந்தில்நாதன், வி.தொ.ச. ஒன்றிய செயலாளர் ஜெ.ஜெயராமன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சுளா இலரா, மாதர்சங்க மாவட்ட தலைவர் ஆர் சுலக்சனா, மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர்.உஷா, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றியச் செயலாளர் நல்ல சுகம் மற்றும் வட்டார ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.


செய்தி உதவி:
தோழர். கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.

Leave a Reply