Home>>செய்திகள்>>பல ஆண்டுகளாக வீடில்லாமல் வசித்து வரும் நரிக்குறவர்கள்.
செய்திகள்தமிழ்நாடு

பல ஆண்டுகளாக வீடில்லாமல் வசித்து வரும் நரிக்குறவர்கள்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி (இடும்பாவனம்) வேதாரண்யம் – முத்துப்பேட்டை சாலை ஓரத்தில் சுமார் 30 நரிக்குறவர் சகோதர குடும்பங்கள், குடிசைகளில் பெண்கள், குழந்தைகளுடன் பாதுகாப்பு இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். நான் 15 ஆண்டுகளாக தினமும் பார்த்து வருகிறேன்.

ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை என அனைத்தும் இருக்கு. ஆனால் வசிப்பதற்கு வீடு தான் இல்லையென வேதனையோடு கூறுகிறார்கள். தமிழ்நாடு முதல்வர் கருணை கூர்ந்து அம்மக்களுக்கு பாதுகாப்பான வீடுகள் கட்டித்தர வேண்டுகிறேன்.


திரு. செல்வம்,
அரசுப்பள்ளி ஆசிரியர்.

Leave a Reply