Home>>கல்வி>>தரக்குறைவாக நடந்துகொண்ட ஆசிரியருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்
கல்விசெய்திகள்தமிழ்நாடுபெண்கள் பகுதி

தரக்குறைவாக நடந்துகொண்ட ஆசிரியருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்

கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஆர்எஸ் புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா என்னும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் திடீரென்று அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து விசாரித்தபோதுதான் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தொடர்ந்து சில நாட்களாகவே மாணவியின் பள்ளியில் பணிபுரியும் மிதுன் சக்கரவர்த்தி என்னும் இயற்பியல் ஆசிரியர் ஒருவர் இந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இது குறித்து மாணவி தன் வீட்டில் தெரிவித்த பின்னர் மாணவியின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தில் ஆசிரியர் மீது புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் பள்ளி நிர்வாகம் எடுக்கவில்லை. இதற்கு முன்பாகவே மாணவி மாற்றுச் சான்றிதழ் பெற்று வேறு ஒரு பள்ளியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

வேறு பள்ளிக்குச் சென்ற பின்னரும் மாணவிக்குத் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

பாடம் கற்பித்து நல்லொழுக்கத்தையும் கற்பிக்க வேண்டிய ஆசிரியரே இவ்வாறு நடந்துகொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

தொடர்ச்சியாகவே தமிழ்நாட்டில் பல பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் மாணவியரிடம் தரக்குறைவாக நடந்து வருகின்றனர். இத்தகைய ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இவ்வாறு நடந்துகொண்ட ஆசிரியருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தமிழ் மாணவர் பெருமன்றம் வலியுறுத்துகிறது.

புகார் அளித்தும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.


தமிழ் மாணவர் பெருமன்றம்.


செய்தி சேகரிப்பு:
திரு. நிரஞ்சன்,
மன்னார்குடி.

Leave a Reply