Home>>உலகம்>>ஈழம்>>மாவீரர் நாளில் மனஉறுதி ஏற்போம்…
ஈழம்உலகம்தமிழ்நாடு

மாவீரர் நாளில் மனஉறுதி ஏற்போம்…

தனித்தமிழ் ஒன்றியம்!

இனியொரு விடுதலை இயக்கம்
இத்தமிழ் மண்ணகம் எழுந்தால்
துணிவினைத் துரும்பிலும் நிரப்பித்
தொடர்புலிப் பெரும்படை நடத்தும்!
பனிமலைக் கடல்புறத் தரசும்
படும்புலிப் படைவிழிக் கலறும்!
தனியிரு தமிழ்நிலஞ் சமைத்துத்
தனித்தமிழ் ஒன்றியம் படைக்கும்!

அமைவிடஞ் சுற்றிலுஞ் சிறந்த
அரணெனப் புலிப்படை திகழும்!
தமிழ்மலர் மணச்சிற கவிழ்க்கும்
தனித்தமிழ் இலக்கியம் முகிழ்க்கும்
தமிழரின் வணிகமும் பெருகும்
தமிழ்க்கலை தனில்மனம் உருகும்!
தமிழணங் குளம்மிகக் குளிர்வள்
தலைமிசை தமிழருள் பொழிவள்!


ஏறன் சிவா
நளி (கார்த்திகை) ௧௧, ௨०௫௨
நவம்பர் 27, 2021

இலக்கியத்துறை
வள்ளுவப் பண்பாட்டு நடுவம்!


பட உதவி:
இணையம்.


செய்தி சேகரிப்பு:
திரு. நிரஞ்சன்,
மன்னார்குடி.

Leave a Reply