Home>>கலை>>பரதநாட்டியத்தில் மாநில அளவில் முதல் பரிசு பெற்ற திருத்துறைப்பூண்டி மாணவி தொல்காப்பியா
கலைகல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்

பரதநாட்டியத்தில் மாநில அளவில் முதல் பரிசு பெற்ற திருத்துறைப்பூண்டி மாணவி தொல்காப்பியா

பரதநாட்டியத்தில் மாநில அளவில் முதல் பரிசு பெற்ற திருத்துறைப்பூண்டி தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி தொல்காப்பியா அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பாராட்டு,
தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கம் சார்பில் நடைபெற்ற மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் “கலா உத்சவ்” பரத நாட்டியப்போட்டியில் கலந்துகொண்டு தமிழ்நாடு மாநில அளவில் முதல் பரிசு பெற்ற திருத்துறைப்பூண்டி தூய அந்தோணியார் மெட்ரிக் மேநிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி தொல்காப்பியா அவர்களை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி காயத்திரி கிருஷ்ணன், திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் பாராட்டினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், முன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், தூய அந்தோணியார் மெட்ரிக் மேநிலைப்பள்ளி பள்ளி முதல்வர் திருமதி விமலா கஸ்தூரி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கலந்துகொண்டனர். முதல்பரிசு பெற்ற மாணவி தொல்காப்பியா பாரதமாதா சேவை நிறுவனங்களின் இயக்குநர் எடையூர் மணிமாறன் மற்றும் திருவாரூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சங்கீதா மணிமாறன் ஆகியோரின் மகள் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பரிசு பெற்ற தொல்காப்பியாவை பரதநாட்டிய கலைஞர்களும் சேவைச் சங்கத்தினர்கள் பலரும் பாராட்டினர். மேலும் புதுடெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்வு பெற்றுள்ளார்.


செய்தி உதவி:
தோழர் கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.

Leave a Reply