Home>>காவல்துறை>>சேரன்மகாதேவி துணை ஆட்சியர், திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை திடீரென பணியிட மாற்றம் செய்து இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றன.
காவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

சேரன்மகாதேவி துணை ஆட்சியர், திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை திடீரென பணியிட மாற்றம் செய்து இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றன.

நெல்லை மாவட்டம், ராதாபுரம், கூடங்குளம், இருக்கன்துறை ஆகிய பகுதிகளில் உள்ள ஆளுங்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு தொடர்புடைய கல் குவாரிகளில் இருந்து முறைகேடாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கனிம வளங்களை அள்ளிச்சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்த சேரன்மகாதேவி துணை ஆட்சியர், திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை திடீரென பணியிட மாற்றம் செய்திருப்பதாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

இந்த விவகாரத்தில் மேலும் பல உயரதிகாரிகளையும் மாற்றுவதற்கு ஆளுங்கட்சியினர் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

நியாயமாக செயல்படும் அதிகாரிகளை தங்களது வழக்கப்படி தி.மு.க.வினர் வேட்டையாடத் தொடங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதுதான் விடியல் ஆட்சியின் லட்சணமா?


திரு. TTV. தினகரன்,
தலைவர்,
அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம்.

Leave a Reply