Home>>இந்தியா>>கிந்தி முழக்கத்தை பாரதிதாசன் பல்கலைக்கழகம் பயன்படுத்தி இருப்பது கிந்தித் திணிப்பு தான்.
இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடு

கிந்தி முழக்கத்தை பாரதிதாசன் பல்கலைக்கழகம் பயன்படுத்தி இருப்பது கிந்தித் திணிப்பு தான்.

திருச்சியில் நாளை நடைபெறவிருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கான அழைப்பிதழில் விடுதலை நாள் பவள விழாவைக் குறிக்க Azadi Ka Amrit Mahotsav என்ற கிந்தி முழக்கம் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கதாகும்!

விடுதலை நாள் பவள விழாவுக்கான வாசகமாக Azadi Ka Amrit Mahotsav என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதை “சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா” என தமிழாக்கம் செய்துள்ள தமிழக அரசு, அதைத் தான் பயன்படுத்த வேண்டும். அதை பாரதிதாசன் பல்கலைக்கழகம் மீறியுள்ளது!

அழகான தமிழ் முழக்கத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ள நிலையில், கிந்தி முழக்கத்தை பாரதிதாசன் பல்கலைக்கழகம் பயன்படுத்தியிருப்பது கிந்தித் திணிப்பு தான். தமிழக அரசின் ஆணையை மதிக்காத பாரதிதாசன் பல்கலைக்கழகம் யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகிறது?

அனைத்து தமிழ்நாடு அரசு நிறுவனங்களும் மாநில அரசின் ஆணையை மதிப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆணையை மதிக்காமல் கிந்தி முழக்கத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

#StopHindiImposition #BharathidasanUniversity
#TNGovt

(பாரதிதாசன் பல்கலைக்கழகம் கிந்தியைத் திணிக்கக் கூடாது : மருத்துவர் அன்புமணி இராமதாஸ் டுவிட்டர் பதிவு)


மருத்துவர் அன்புமணி ராமதாசு,
மாநிலங்களவை உறுப்பினர்,
பாட்டாளி மக்கள் கட்சி.

Leave a Reply