Home>>அரசியல்>>பொதுமக்களுக்கு தரமான பொங்கல் பரிசுத்தொகுப்பு கிடைப்பது சந்தேகம்தான்
அரசியல்செய்திகள்தமிழ்நாடு

பொதுமக்களுக்கு தரமான பொங்கல் பரிசுத்தொகுப்பு கிடைப்பது சந்தேகம்தான்

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான பொருள்களைக் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடைபெறுவதாக வெளியாகும் செய்திகள் குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

கடந்த பழனிச்சாமி ஆட்சியில் அரசு டெண்டர்களை எடுத்து புகாருக்குள்ளான திருப்பூரைச் சேர்ந்த நிறுவனத்திற்கே பொங்கல் பரிசு வினியோக டெண்டர் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் பெரிய அளவு கமிஷன் கைமாறி இருப்பதாகவும், இதனால் பொதுமக்களுக்கு தரமான பொங்கல் பரிசுத்தொகுப்பு கிடைப்பது சந்தேகம்தான் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

இதற்கு தி.மு.க அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? இல்லாவிட்டால் commission, collection, corruption ஆகியவற்றில் திரு.பழனிசாமியும், திரு.ஸ்டாலினும் ஒன்றுதான் என்பதை ஒப்புக்கொள்வார்களா?


திரு. TTV. தினகரன்,
தலைவர்,
அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம்.

Leave a Reply