Home>>கல்வி>>நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் பலி.
தமிழ்நாடு சட்டமன்றம்
கல்விசெய்திகள்தமிழ்நாடுதிறவுகோல்

நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் பலி.

நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து விபத்தில் பலியான நான்கு மாணவர்களின் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் எனது சார்பாகவும் பள்ளிக் கல்வித்துறை சார்பாகவும் எனது ஆழ்ந்த வருத்தத்தையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன். அதேபோல் காயம் அடைந்துள்ள மாணவர்களுக்கும் தேவையான உதவிகளை அரசு செய்துத்தரும் என்று உறுதி அளிக்கிறேன்.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்கு தேவையான ஆயத்தப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி பள்ளிக் கல்வித்துறை சீரமைக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
கல்வித்துறை அமைச்சர்,
தமிழ்நாடு.

Leave a Reply