Home>>இந்தியா>>மன்னார்குடி கல்வி மாவட்ட அளவிலான தேசிய வாக்காளர் தின போட்டிகள்…
இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

மன்னார்குடி கல்வி மாவட்ட அளவிலான தேசிய வாக்காளர் தின போட்டிகள்…

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மன்னார்குடி கல்வி மாவட்ட அளவிலான உயர் நிலை மற்றும் மேல் நிலை வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு திறன் போட்டிகள் மன்னார்குடி பின்லே அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

பின்லே பள்ளி தலைமை ஆசிரியர் வசந்திசெல்வகனி தலைமை வகித்தார் மன்னார்குடி கல்வி மாவட்ட அலுவலர் இரா. மணிவண்ணன் பல்வேறு திறன் போட்டிகளை தொடங்கி வைத்தார். பள்ளித் துணை ஆய்வர் கோ. ரமேஷ் குமார் வரவேற்று பேசினார். கல்வி மாவட்ட அளவில் 32 பள்ளிகளிலிருந்து 262 மாணவ மாணவியர் போட்டிகளில் கலந்து கொண்டனர். கட்டுரை, ஓவியம், பாட்டு, முழக்கத்திற்கான வரிகளை (slogan) எழுதுதல், சுவரொட்டி தயாரித்தல், விநாடி வினா ஆகிய ஏழு வகை போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளின் நடுவர்களாக தலைமை ஆசிரியர்கள் உதயகுமார் (பூவனூர்), மெய்யப்பன் (காரக் கோட்டை) கலைமணி (மேல வாசல்) ஜீவானந்தம் (எடகீழையூர்) திருவாரூர் மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. என். இராஜப்பா மற்றும் ஆசிரியர்கள் பூவைசாரதி ஜாய் சுந்தரி, அருண் இன்பராஜ், சுரேஷ், சின்னையன், அன்பரசும், திவாகர் மற்றும் பலர் செயல்பட்டு பரிசுக்கு உரியவர்களை தேர்வு செய்தனர்.

இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 8 இடங்களைப் பெற்றவர்கள் திருவாரூர் மாவட்ட அளவில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்க பட உள்ளனர். மாவட்ட கல்வி அலுவலக இருக்கைப் பணி கண்காணிப்பாளர் கோ. ரத்னவேலன் நன்றி கூறினார்.


செய்தி உதவி:
திரு. என். இராஜப்பா,
ஆசிரியர்,
தேசிய மேல்நிலைப் பள்ளி,
மன்னார்குடி.

Leave a Reply