Home>>செய்திகள்>>செஞ்சிலுவை சார்பில் தார்ப்பாய் மற்றும் கொசு வலைகள் வழங்குதல்.
செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

செஞ்சிலுவை சார்பில் தார்ப்பாய் மற்றும் கொசு வலைகள் வழங்குதல்.

இந்தியன் செஞ்சிலுவை சமூகத்தின் மன்னார்குடி கிளை சார்பாக மன்னார்குடி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் கூரை வீட்டில் வசிக்கும் மாணவிகள் 20 பேருக்கு தார்ப்பாய் மற்றும் கொசுவலை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்தியன் செஞ்சிலுவை சமூகத்தின் துணைத் தலைவர் ஆசிரியர் என். இராஜப்பா தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் அருண் வரவேற்று பேசினார், பள்ளியின் தலைமை ஆசிரியர் கனராஜ சண்முக ராமன் அவர்கள் முன்னிலையில் மன்னார்குடி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 20 மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் தார்ப்பாய் மற்றும் கொசு வலைகள் வழங்கப்பட்டன.

பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தீபா உதவி தலைமை ஆசிரியர் ஆரோக்யதாஸ் மற்றும் ஆசிரியர்கள் நேசக்கரம் ஜான்சன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இறுதியாக மரியசிரில் அவர்கள் நன்றி கூறினார்.


செய்தி உதவி:
திரு. என். இராஜப்பா,
ஆசிரியர்,
தேசிய மேல்நிலைப் பள்ளி,
மன்னார்குடி.

Leave a Reply