Home>>செய்திகள்>>தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் திண்டுக்கல் அலுவலர்.
செய்திகள்தமிழ்நாடுமாற்று திறனாளிகள்

தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் திண்டுக்கல் அலுவலர்.

தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலரை கண்டித்து முற்றுகை போராட்ட அறிவிப்பு.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக்குழு கூட்டம் 05.01.22 அன்று காலை திண்டுக்கல்லில் மாவட்ட தலைவர் செல்வநாயகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பகத்சிங், மாநில செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட மாவட்டக்குழு உருப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு…

மாற்றுத்திறனாளி விரோத நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலரை கண்டித்து 24.01.22 முற்றுகை போராட்டம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக தினசரி மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வந்து செல்கிறார்கள். இவ்வாறு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகள் பல மாதங்களாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் இருக்கிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கூட்டப்படவில்லை, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் முறையாக நடத்தப்படவில்லை, வெள்ளிக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் நடைபெற்றுவந்த அடையாள அட்டை முகாம் நடத்தப்படவில்லை, அக் 26 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி அளிக்கப்பட மனுக்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் எந்த மனுவிற்க்கும் முறையாக பதில் அளிப்பதில்லை.

இப்படியாக தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் போக்கானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இப்பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாற்றுத்திறனாளிகளின் எந்த கோரிக்கையும் நிறைவேற்றாமல் இருக்கும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலரை கண்டித்து வருகிற 24.01.22 அன்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்றும் இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதுமிருந்து 2000க்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகளை திரட்டுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

P. செல்வநாயகம் – மாவட்ட தலைவர்
S. பகத்சிங் – மாவட்ட செயலாளர்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்,
திண்டுக்கல் மாவட்டக்குழு,
தொடர்பு இலக்கங்கள்: 9360804000, 9994873253

Leave a Reply