Home>>இந்தியா>>குடியரசு தினத்தையொட்டி சேரன்குளத்தில் முன்னாள் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

குடியரசு தினத்தையொட்டி சேரன்குளத்தில் முன்னாள் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குடியரசு தினத்தையொட்டி சேரன்குளத்தில் ஸ்ரீ விஷ்ணு மாடன் ரைஸ் மில் மற்றும் JCI மன்னை இணைந்து முன்னாள் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியை நடத்தியது.

மன்னார்குடி ஒன்றிய பெருந்தலைவர் சேரன்குளம் T.மனோகரன், காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் திரு. பாலச்சந்தர் ஆகியோர் ராணுவ வீரர்களை கவுரவித்தனர்.

JCI Mannai தலைவர் முகமது பைசல் தலைமை வகித்தார். முன்னாள் ராணுவத்தினர் கள் சங்க தலைவர் கேப்டன் விஜயராகவன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இந்நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர்.

மன்னார்குடி மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் JCI நிர்வாகிகள் VSG. கோவிந்தராஜன், ஜெயக்குமார், கலைச்செல்வன், விக்னேஷ் குமார், வினோத், கமலப்பன், செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சேரன்குளம் கிராமத்தில் 105 அடி உயரத்தில் கொடி தேசியக் கொடியை பறக்க விட்டுள்ள இமயம்வீரன் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


செய்தி உதவி:
தோழர் முகமது பைசல்,
மன்னார்குடி.

Leave a Reply