Home>>கல்வி>>களப்பால் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பாலசூர்யாவுக்கு திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் பாராட்டு.
கல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மருத்துவம்மாவட்டங்கள்

களப்பால் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பாலசூர்யாவுக்கு திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் பாராட்டு.

நீட் தேர்வில் சாதனை படைத்த களப்பால் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பாலசூர்யாவுக்கு திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் தன்னுடைய பாராட்டை தெரிவித்தார்.

நீட் தேர்வில் அரசு பள்ளி அளவில் திருவாரூர் மாவட்டத்தில் முதலிடமும் மாநில அளவில் 18 வது இடமும் பெற்று சாதனை படைத்த களப்பால் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவனும், கோவில் களப்பால் சூர்யமூர்த்தி -ராதா தம்பதியரின் மகனுமான சூ.பாலசூர்யா அவர்களுக்கு திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது கோட்டூர் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி என்.மணிமேகலை முருகேசன், சிபிஐ ஒன்றியச் செயலாளர் (பொ) எம்.செந்தில்நாதன், தலைமையாசிரியர் (பொ) ப.சுரேஷ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எஸ்.ராஜேந்திரன், குறிச்சிமூலை ஊராட்சி மன்ற தலைவர் கேஎம்.அறிவுடைநம்பி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சுளா இலரா, வட்டார ஊராட்சி உறுப்பினர்கள் சாந்தி எம்ஜிபாலு, சாந்தி மகேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் களப்பால் சுஜாதா பாஸ்கரன், அக்கரைகோட்டகம் முத்தமிழ்ச்செல்வி வேல்முருகன், குலமாணிக்கம் புவனேஸ்வரி குப்புசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


செய்தி உதவி:
தோழர் கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.

Leave a Reply