Home>>செய்திகள்>>தஞ்சை தேர் திருவிழா விபத்தை உரிய முறையில் விசாரித்து காரணத்தை கண்டறிய வேண்டும்.
செய்திகள்தஞ்சாவூர்தமிழ்நாடுமாவட்டங்கள்

தஞ்சை தேர் திருவிழா விபத்தை உரிய முறையில் விசாரித்து காரணத்தை கண்டறிய வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு அப்பர் கோவில் தேர் திருவிழாவில் நேரிட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் உடல் நலம் பெற்றிட பிராத்திக்கிறேன்.

இவ்விபத்தில் பலியானோருக்கு நிவாரணம் வழங்குவது மட்டுமல்லாது, உரிய முறையில் விசாரித்து விபத்திற்கான காரணத்தை கண்டறிய வேண்டும்.

இனிவரும் காலங்களில் மக்கள் பெருமளவில் கூடும் திருவிழாக்களில் மிகுந்த கவனத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.


திரு. தினகரன்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்,
நிறுவனர்.

Leave a Reply