Home>>கல்வி>>களப்பால் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து
கல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மாவட்டங்கள்

களப்பால் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

களப்பால் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி: சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் பங்கேற்று வழங்கினார்.


திருத்துறைப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட களப்பால் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து அவர்கள் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி திட்ட இலவச சைக்கிள்கள் வழங்கினார். இந்த நிகழ்வில் திமுக கோட்டூர் ஒன்றியச் செயலாளர் பால. ஞானவேல், ஒன்றிய பெருந்தலைவர் திருமதி மணிமேகலை முருகேசன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

மேலும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தோழர் எம்எஸ் ராஜேந்திரன், பள்ளி தலைமையாசிரியர் திரு கலைச்செல்வன், வட்டார ஊராட்சி உறுப்பினர்கள் சாந்தி எம்ஜிபாலு, சாந்தி மகேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் களப்பால் சுஜாதா பாஸ்கரன், குறிச்சிமூளை கேஎம் அறிவுடைநம்பி, அக்கரை முத்தமிழ்செல்வி தங்க வேல்முருகன், குலமாணிக்கம் புவனேஸ்வரி குப்புசாமி, முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.நாராணசாமி மற்றும் இருபால் ஆசிரிய பெருமக்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


செய்தி உதவி:
தோழர் கா. லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.
19/09/2022.

Leave a Reply