மன்னார்குடி நகராட்சி புதிய பாதாள சாக்கடை திட்டப்பணி பொறுப்பை தட்டி கழிக்கிறதா அல்லது அலட்சியம் காட்டுகிறதா?
மன்னார்குடி நகராட்சி நிர்வாகம், மன்னார்குடி நகரத்தில் புதிய பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தபட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கான தீர்மானம் மன்னார்குடி நகராட்சியில் நிறைவேற்றபட்டது. இதற்கான துணை விதிகள்
மன்னார்குடி நகராட்சியால் வகுக்கபட்டு நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கான வைப்புதொகை மாதந்திர கட்டணம் ஆகியவை மன்னார்குடி நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றபட்டு நிர்ணயிக்கபட்டுள்ளது.
இந்த திட்ட பணியில் மன்னார்குடி நகராட்சியின் பங்கு தொகையும் உள்ளது. மேலும் மன்னார்குடி நகராட்சி தான் பணிகள் முடிந்து இருவருடங்களுக்கு பிறகுஇதை பராமரிக்க போகிறது.
இதை பயன்படுத்தும் மக்கள் மன்னார்குடி நகராட்சிக்கு தான் வைப்பு தொகை செலுத்த போகிறார்கள். மன்னார்குடி நகராட்சிக்கு தான் மாதாந்திர கட்டணம் செலுத்த போகிறார்கள்
ஆனால் பணிகளை TWAD Board (குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொள்கிறது).
பணிகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக கழிவு நீர் தடைபடாமல் செல்ல சரியான வகையில் வாட்டம் அமைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. குழாய்களின் அளவு சிறிதாக உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் Machine hole கட்டுவதில் அதன் ஆழம் அளவு சரியாக இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது
கட்டப்படும் Machine hole தரமாக கட்டப்படுகிறதா?
பழைய பாதாள சாக்கடை திட்டத்தில் Machine wholeல் (Man hole) குழாய்க்கு கீழே 1 அடி அளவுக்கு ஆழம் இருக்கும். இதனால் அடைப்பு ஏற்படும் போது அதிலிருந்து அடைப்பு ஏற்படுத்திய பொருள்களை எளிதாக அகற்றலாம்.
ஆனால் தற்போது தரையோடு குழாய் பதிக்கபடுவதால், அடைப்பு ஏற்படும் போது சரி செய்வதில் சிரமம் ஏற்படலாம். இப்படி சில பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
பல இடங்களில் குடிநீர் குழாய் எங்கு இருக்கிறது என தெரியாமல் ஒப்பந்தகாரர்கள் Jcbயை வைத்து குழி தோண்டுவதால் குடிநீர் குழாய்கள் உடைக்கபட்டு அதில் கழிவு நீர் கலந்து விடுகிறது இணைப்பை. சரி செய்தாலும் குடிநீர் சுமார் 4 நாள்களுக்கு கலங்களாக வருகிறது.
இதை பற்றி எல்லாம் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. நகராட்சி அதிகாரிகள் சென்று பணிகளை ஆய்வு செய்வதில்லை. அதில் ஏற்படும் குறைகளை சரி செய்ய எந்த நடவடிக்கையும் இல்லை. நகராட்சி நிர்வாக அதிகாரிகள், பொறியியல் பிரிவு அதிகாரிகள் TWAD Board பணிகளை மேற்கொள்கிறது என கண்டு கொள்ளாமல் செல்கின்றனர்.
ஆனால் நகராட்சி நிர்வாகம் இதை இவ்வளவு அலட்சியமாக TWAD போர்டு தான் பொறுப்பு என
கடந்து விட முடியாது. மக்கள் நகராட்சிக்கு தான் வரி செலுத்துகின்றனர். நகராட்சிக்கு தான் வைப்புதொகை மற்றும் மாதாந்திர கட்டணத்தை செலுத்த போகிறார்கள்.
பணி முடிந்து சில வருடங்களுக்கு பிறகு நகராட்சி தான் பராமரிக்க போகிறது. எனவே பின்னர் ஏற்படும் பிரச்சனைகளை நகராட்சி நிர்வாகம் தான் சந்திக்க நேரிடும், மேலும் மக்கள் நகர மன்ற உறுப்பினர்களுக்கு தான் வாக்களித்துள்ளனர்.
எனவே பிரச்சனை என்றால் அவர்களை தான் கேட்பார்கள். அப்போது மன்ற உறுப்பினர்கள் நகராட்சி நிர்வாகத்தை தான் கேள்வி கேட்பார்கள். எங்களுக்கு பொறுப்பு இல்லை எனில் எளிதில் தட்டி கழிக்க முடியாது.
மேலும் பல கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்தபடுகிறது, மக்களின் வரிபணம் வீணாகி விடக் கூடாது. ஏற்கனவே இதில் Pumping Station மற்றும் Purify Station போன்ற உள் பணிகளை முடித்துவிட்டு வெளிபணிகளை Machine hole அமைப்பது, குழாய் பதிப்பது போன்ற பணிகளை மேற்கொண்டிருந்தால், சாலைகள் அதிக காலம் தோண்டட்டு கிடந்திருக்காது.
மேலும் இறுதியாக கழிவுகளை கொண்டு Purify செய்யப்பட்டு வெளியாக்கபடும் கிழக்கு பகுதியில் இருந்து பணிகளை மேற்கொண்டிருந்தால் வாட்டம் சரியாக அமைத்து பணிகள் எளிதாக இருந்திருக்கும்.
இணைப்பு கொடுத்து முன்னோட்டம் பார்த்திருக்கலாம், சரி அது தான் முடிந்துவிட்டது. தற்போது மேற்கொள்ளும் பணிகளாவது முறையாக மேற்கொள்ள வேண்டும். கிழக்கு பகுதியில் 23, 25, 32, 22, 21 ஆகிய வார்டுகளில் பழைய பாதாள சாக்கடை செயல்படுத்தபட்டு வருவதால், இங்கு பணி மேற்கொள்ளும் போது மேலும் கவனமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இல்லை எனில் பழைய பாதாள சாக்கடை குழாய்கள் உடைபட்டு பல பிரச்சனைகள் ஏற்படும்
கழிவு நீர் சாலையில் ஓடும். எனவே நகராட்சி நிர்வாகம் இந்த பணிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும்.
பணிகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும், நகராட்சி அதிகாரிகளுக்கும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கும் ஏதும் பிரச்சனையா என தெரியவில்லை.
நகராட்சி அதிகாரிகள் பணி நடைபெறும் களத்திற்கே வருவதில்லை. இது இப்படியே சென்றால்
பின்னர் பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே நகராட்சி நிர்வாகம் தனது பொறுப்பை தட்டி கழிக்காமல், பல கோடி ரூபாய் (229 கோடி) பணத்தில் நடைபெறும்.
இந்த பணிகளை முறையாக ஆய்வு செய்து பின்னர் பிரச்சனைகள் ஏற்படா வண்ணம் பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் மக்களின் வரிபணம் வீணாவதோடு
பணி நடந்து முடிந்த பிறகு பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
பின்னர் பிரச்சனை ஏற்பட்டால் நகராட்சி நிர்வாகமே பொறுப்பு ஏற்க நேரிடும். எனவே இனிமேல் நடைபெறும் பணிகளாவது நகராட்சி நிர்வாகத்தின் கண்காணிப்பு மற்றும் ஆலோசளை கீழ் நடந்தால் தான் பிரச்சனைகள் குறையும்.
திட்டம் தரமாக செயல்படுத்த வேண்டும், மக்கள் வரி பணம் வீணாக வேண்டாம், ஒப்பந்தகாரரின் நலனை விட பொதுமக்களின் நலன் தான் என்ற அக்கறை இருந்தால் உரியவர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
மக்களுக்காக மக்கள் வரிபணத்தில் நடக்கும் திட்டம் மக்கள் முழுமையாக பயனடையும் வகையில் மேற்கொள்ள வேண்டும்.
—
திரு. ஆனந்தராஜ்,
மன்னார்குடி அமமுக நகர செயலாளர்,
மன்னார்குடி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்.


