Home>>செய்திகள்>>நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.
செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மாவட்டங்கள்வேளாண்மை

நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகா பெருவிடைமருதூர் நேரடி நெல்கொள் முதல் நிலையத்தின் நிலை இது. கடனை வாங்கி சிறு குறு விவசாயிகள் இந்தாண்டு தண்ணீர் பஞ்சமில்லாமல் குறுவை சாகுபடி செய்தனர்.

அறுவடை நேரத்தில் மழையும் ஒத்துழைப்பு நல்கியது,பெரும் விவசாயிகள் அனைவரும் குறித்த நேறத்தில் அறுவடை செய்து உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை போட்டு விட்டனர்.

ஆனால் மழையை முந்திக்கொண்டு அறுவடை செய்தாலும்,அந்த நெல்லை விற்பதற்கு வழி இல்லாமல் இன்னும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடிக்கி வைத்து காவல்காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

அறுவடைக்கு முன்பு மழையிலிருந்து தப்பித்த சிறு குறு விவசாயிகள், இன்று அறுவடை முடிந்து விற்பணைக்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைக்கப்பட்ட நெல்லையும், மூட்டைக்கட்டி அடிக்க வைக்கப்பட்ட நெல்லையும் மழையில் நனைய விட்டு வேதனையோடு காத்து இருக்கின்றனர்.

தீபாவளி நேரம் பிள்ளைகளுக்கு புது துணிமணிகள் வாங்கி சந்தோசமாக தீபாவளியைக் கொண்டாட நினைத்தவர்களுக்கு இப்படி ஊழியர்களின் அலட்சியத்தால் நெல் மூட்டைகள் நனைந்து வீனாய் போய்க் கொண்டிருக்கிறது.

அங்கு பணிபுரியும் எழுத்தரிடம் ஏன் இவ்வளவு தாமதம் எனக்கேட்டால் இதுவரை 12,000 நெல்மூட்டைகள் பிடித்திருக்கிறோம், ஆனால் 7,000 நெல் மூட்டைகளைதான் குடோன்களுக்கு அனுப்பி வைத்திருக்குறோம், மீதமுள்ள 6,000 நெல் மூட்டைகளும் அப்படியே கொள்முதல் நிலையத்திலேயே தேங்கி கிடக்கிறது,

ஏற்றிவிட லாரியை அனுப்புவதில்லை என அதிகாரிகளின் மீது குறை கூறுகிறார்.

ஆயிரம் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்தால் அதனை மறு நாள் ஏற்றிச் சென்றால்தானே விவசாயிகளிடம் மறுநாள் கொள்முதல் செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்க முடியும்.?

ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எத்தனை மூட்டைகள் தான் அடுக்கி வைக்க முடியும், மழை செய்து கொண்டிருப்பதால் வெளியிலும் அடுக்கி வைக்க முடியாது.

இவ்வாறு அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதிக்கப்படுவது அப்பாவி சிறிய விவசாயிகள்தான்,
கிட்டத்தட்ட இரண்டு மூன்று நாட்கள் அறுவடை செய்த நெல்லை காயவைத்து பிறகு,அதனை மூட்டையாகவோ அல்லது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கிடைக்கும் இடங்களிளோ கொட்டி வைத்து கிட்டத்தட்ட 20 நாட்களாக காத்திருக்கின்றனர்.

ஒரு தீவிர திமுககாரனான நான் அறுவடை செய்த நெல்லை நான்கு நாட்கள் காய வைத்து அதன் பிறகு மூட்டையாக கட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடிக்கி வைத்து இன்றோடு14 நாட்கள் ஆகிறது ஆனால் இன்னும் எனது நெல்லை கொள்முதல் செய்யவில்லை.

இவ்வாறு பல விவசாயிகள் வேதனையோடு. காத்துக்கிடக்கின்றனர், தயவு செய்து அதிகாரிகள் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை உடனடியாக லாரிகளை அனுப்பி ஏற்றி குடோன்களுக்கு அனுப்பி காத்து கடக்கும் விவசாயிகளின் நெல்லை சீக்கிரம் கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது பெருவிடைமருதூரில் மட்டுமல்ல, பல இடங்களில் இப்படிதான் உள்ளது.இதனால் எங்கள் கட்சிக்குதான் கெட்ட பெயர் உண்டாகிறது, அதிகாரிகள் இதில் அதிக கவனம் செலுத்தி விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும்.!


செய்தி:
திரு. பா. ரவிக்குமார்,
பெருவிடைமருதூர்.

Leave a Reply