Home>>அரசியல்>>திமுக அரசு அலட்சியம்: ஆதிதிராவிடர் விடுதிகள் சீரழிவு!!
அரசியல்கல்விசெய்திகள்தமிழ்நாடு

திமுக அரசு அலட்சியம்: ஆதிதிராவிடர் விடுதிகள் சீரழிவு!!

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகள் தொடர்ந்து மூடப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. சமூக நீதியின் அடையாளமாக விளங்கும் இந்த விடுதிகள், அரசின் அலட்சியத்தால் சீரழிந்து வருகின்றன.

1,331 விடுதிகளில் தங்கியிருக்க வேண்டிய 98,000 மாணவர்களுக்குப் பதிலாக, தற்போது வெறும் 65,000 பேர் மட்டுமே உள்ளனர். முந்தைய ஆட்சியில் 80,000 ஆக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை, இந்தத் தி.மு.க. ஆட்சியில் படுமோசமாகக் குறைந்து 65,000 ஆகச் சரிந்துள்ளது. உணவு சரியில்லை, அடிப்படை வசதிகள் இல்லை என மாணவர்கள் விலகிச் செல்லும் இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, அதிகாரிகள் இதுவரை 100க்கும் மேற்பட்ட விடுதிகளை மூடிவிட்டனர்.

ஆகஸ்ட் வரை 51 ஆக இருந்தது, இப்போது இரட்டிப்பாகிவிட்டது.

ஆதிதிராவிடர் நலத்துறை, மேலும் 1,200 விடுதிகள் மட்டுமே செயல்படுவதாக வளர்ச்சித் துறை ஆணையரகத்திற்குத் தெரிவித்திருப்பது, அரசின் பொறுப்பற்ற போக்கைக் காட்டுகிறது. அரசின் அலட்சியம் தொடர்ந்தால், இந்த விடுதிகள் மொத்தமாக மூடப்பட்டு, ஏழை மாணவர்களின் கல்வி எதிர்காலம் நாசமாகிவிடும்.

தி.மு.க. அரசு உடனடியாக மூடிய விடுதிகளைத் திறந்து, தரமான வசதிகளைச் செய்து, மாணவர்களை மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஐயா. ஜான் பாண்டியன்,
நிறுவனர் மற்றும் தலைவர்,
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்.

Leave a Reply