Home>>அரசியல்>>வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே! சிறப்புத் தீவிர சீராய்வை (SIR) உடனே நிறுத்து!
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே! சிறப்புத் தீவிர சீராய்வை (SIR) உடனே நிறுத்து!

இந்தியத் தேர்தல் ஆணையமே! வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே! சிறப்புத் தீவிர சீராய்வை (SIR) உடனே நிறுத்து!


சென்னையில் கொட்டும் மழையில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்!

“இந்தியத் தேர்தல் ஆணையமே! வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே! சிறப்புத் தீவிர சீராய்வை உடனே நிறுத்து! தமிழர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்காதே!” என்ற முழக்கத்தோடு, இன்று (16.12.2025) தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், சென்னையில் கொட்டும் மழையில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் இந்திக்காரர்களை திணிக்கும் நோக்குடன் இந்தியத் தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுத் திட்டத்தை (எஸ்.ஐ.ஆர்.), வெளி மாநிலத்தவர்க்கு தமிழ்நாட்டில் வாக்காளர் அட்டை வழங்கக் கூடாது, தமிழ்நாடு அரசு வெளிமாநிலத்தவர்க்கு குடும்ப அட்டை – ஆதார் அட்டை வழங்கக் கூடாது, மொழிவழி மாநிலம் உருவான 1956க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும், நாகாலாந்து – மிசோரம் – அருணாச்சலப்பிரதேசம் – மணிப்பூரில் உள்ளதைப் போல் தமிழ்நாட்டிற்குள் வெளிமாநிலத்தவர் உள்நுழைந்திட, உள்நுழைவு அனுமதிச் சீட்டு (Inner Line Permit – ILP) முறையைக் கொண்டு வர வேண்டும், தமிழர்களுக்கே தமிழ்நாட்டு வேலைகளை உறுதி செய்திட உடனே சட்டமியற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, இவ்வார்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.

சென்னை, ஜார்ஜ் டவுன் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று (திசம்பர் 16) செவ்வாய் காலை – தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இருநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பேரியக்கத் துணைத் தலைவர் திரு. க. முருகன், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, தலைமைச் செயற்குழு தோழர்கள் வழக்கறிஞர் ஓசூர் கோ. மாரிமுத்து, வெற்றித்தமிழன், மா. மணிமாறன், சிதம்பரம் த.தே.பே. செயலாளர் தோழர் வேந்தன் சுரேசு, மகளிர் ஆயம் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மு. செந்தமிழ்ச்செல்வி, புதுச்சேரி அன்புநிலவன், பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், சென்னை நடுவண் கிளைச் செயலாளர் தோழர் மு. வடிவேலன், அம்பத்தூர் செயலாளர் தோழர் அன்புகிட்டு, ஆதம்பாக்கம் செயலாளர் தோழர் அமுதன், தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் ஐயா சிவ. வடிவேலன், புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் ஐயா சிவ.மு. இராசாராம் உள்ளிட்ட திரளான பொறுப்பாளர்களும் தோழர்களும் இதில் பங்கேற்றனர்.

இதேபோல், திருச்சியிலும் பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
“இந்தியத் தேர்தல் ஆணையமே! எஸ்.ஐ.ஆர். திட்டத்தை உடனே நிறுத்து!”, “வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே!”, “தமிழர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்காதே!”, “தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்க்கு ஆதார் அட்டை – குடும்ப அட்டை வழங்காதே!”, “வெளியாரை வெளியேற்று!” என்பன உள்ளிட்ட முழக்கங்களை, இவ்வார்ப்பாட்டங்களில் பேரியக்கத் தோழர்கள் விண்ணதிர எழுப்பி முழங்கினர்.


தகவல் உதவி:
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்,
பேச: 9443918095
புலனம்: 9841949462

Leave a Reply