Home>>இதர>>தமிழ்நாடு பெயர்க்காரண வரலாறு
இதர

தமிழ்நாடு பெயர்க்காரண வரலாறு

தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வந்த வரலாறு 1969 ஜனவரி 14 ம் தேதியில் தான் தொடங்கியது போல இங்கே ஆண்ட திராவிட கட்சிகள் குறிப்பாக திமுக மற்றும் அதன் தோழமை இயக்கங்கள் ஒரு பொய்யான வரலாற்றை கட்டமைக்கிறார்கள். ஆனால் உண்மை வரலாறு என்பது வேறு..

பாரதியார் பற்றிய சீமான் அவர்களின் பேச்சுக்கு பிறகு அந்த கருத்து இன்னும் தீவிரமடைந்துள்ளது.

தமிழ்நாடு என்னும் பெயர் சங்க இலக்கியங்களிலேயே துவங்கிவிட்டது.

பரிபாடல், சிலப்பதிகாரம், தொல்காப்பியத்தில் நேரடியாக இடம்பெறுகிறது, இது தமிழர்களின் நிலத்தைக் குறிக்கிறது; சங்க காலத்தில் ‘தமிழ்’ என்ற சொல்லும், ‘தென்தமிழ் நாடு’ போன்ற குறிப்புகளும் இருந்துள்ளன, ஆனால் ‘தமிழ்நாடு’ என்ற முழுமையான வடிவம் சிலப்பதிகாரத்தில் தெளிவாகப் பதிவாகியுள்ளது, இது பிற்கால இலக்கியங்களிலும் தொடர்ந்தது.

பரிபாடல்:

“தண்டமிழ் வேலி தமிழ்நாட்டு அகமெல்லாம்” என்ற வரியிலும், “தென் தமிழ் நாடு ஒருங்கு காண” போன்ற வரிகளிலும் ‘தமிழ்நாடு’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சிலப்பதிகாரம்:

இதுவும் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்தது, இதில் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

தொல்காப்பியம்:

நேரடியாக ‘தமிழ்நாடு’ என்ற பெயர் இல்லாவிட்டாலும், ‘தமிழ்’ என்ற சொல் மற்றும் நிலப்பரப்புக்கான குறிப்புகள் உள்ளன.

ஆக,

தமிழ்நாடு’ என்பது புதியதாக உருவாக்கப்பட்ட பெயரல்ல, இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது.

அதே நேரத்தில்,

தமிழ் நாட்டை  முற்காலத்தில் சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், களப்பிரர், சாதவாகனர் போன்ற பல அரச வம்சங்கள் ஆண்டு வந்தன. 14–16-ம் நூற்றாண்டுகளில் விஜயநகரப் பேரரசு இப்பகுதிகளை ஆண்டது. விஜயநகரத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் முசுலிம் ஆட்சியாளர்களும், நாயக்க மன்னர்களும், பாளையக்காரர்களும், குறுநில மன்னர்களும் இதன் பல்வேறு பகுதிகளை ஆண்டு வந்தனர். 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பியர்கள் வாணிபம் செய்வதற்காக இந்தியத் துணைக்கண்டத்தின் தெற்குப் பகுதிக்கு வந்தனர்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தான் புனித ஜார்ஜ் கோட்டை உருவாக்கப்பட்டது.இது தான் 1684 ம் ஆண்டில் மதராஸ் மாகாணமாக பெயர் சூட்டப்பட்டது.

அன்று முதல் தமிழ்நாடு என்னும் பெயர் வழக்கொழிந்து மதராஸ் மாகாணம் என்ற பெயர்தான் நிலைத்தது காரணம் இங்கே 1947 வரை ஆங்கிலேயர் ஆட்சிக்கு கீழ் இந்த பகுதி இருந்தமை யால்.

 

அப்படிப்பட்ட ஒரு அடிமைத் தமிழ்நாட்டில் மகாகவி பாரதி தமிழ்நாடு என்னும் பெயரை உரக்க பயன்படுத்தினார்.

 

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டது தமிழ்நாடு’ 

 

செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்

தேன்வந்து பாயுது காதினிலே.

 

என தமிழ்நாடு என்பதை மறந்து மதராஸ் மாகாணமாக வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு தமிழ்நாடு என்னும் பெயரை நினைவூட்டியவர் பாரதி.

அதன்பின்  1947 ல் ஆங்கில ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுதந்திரம் அடைந்த பின்னர் 1950ல் குடியரசு ஆனது இந்தியா.

ஆனால் அதன்பின்னும் தென்னிந்திய மாநிலங்கள் ஒன்றாகவே இங்கு இருந்தன. 1956 தான் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகுதான் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டது. அதன் பின்னர் தான் மதராஸ் மாகாணத்திற்கு  தமிழ்நாடு என பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க ஆரம்பித்தது.

குறிப்பாக சங்கரலிங்கனார் அவர்கள் 1956 ம் வருடம்  பலதரப்பட்ட கோரிக்கைகளை முன் வைத்து 76 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து மரித்தார். அதில் ஒன்று தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம்.

 

இந்த நேரத்தில் காமராசர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தார்.

தமிழை முதன்முதலில் ஆட்சி மொழியாக கொண்டு வந்தவர் அவரே. அவரே பயிற்று மொழியாக ஆக்க வேண்டும் என, சட்டசபையில் குரல் கொடுத்தார்.கடந்த 1957, 58ம் ஆண்டுதான் பட்ஜெட் முதன் முதலாக தமிழில் தாக்கல் செய்யப்பட்டது.

பின்,

சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற தலைப்பைப் பயன்படுத்த முடிவு செய்து,

1961-62 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த சி.சுப்பிரமணியம் அவர்கள்( அப்போதைய  ஆளும் கட்சி தலைவர்) பிப்ரவரி 24, 1961 அறிவிப்புக்கு இணங்க, பட்ஜெட் ஆவணத்தில் மெட்ராஸுக்குப் பதிலாக தமிழ்நாடு என்று மாற்றியதாகக் கூறினார்.

1961 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாநிலத்திலிருந்து தமிழ்நாடு எனப் பெயரிடப்பட்ட பெயர் மாற்றம் பற்றி அதிகம் பேசப்படவில்லை..

உண்மையில், தெளிவுக்காக, எதிர்காலத்தில் சென்னை என்ற பெயரை தமிழில் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்துவது மெட்ராஸ் நகரத்திற்கு மட்டுமே என்று அரசாங்கம் முடிவு செய்திருந்தது. நிதியமைச்சரும் அவைத் தலைவருமான சி. சுப்பிரமணியம் (சி.எஸ்) பிப்ரவரி 24, 1961 அன்று சட்டமன்றத்தில் இது குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார். காமராஜர் பற்றிய தனது வாழ்க்கை வரலாற்றில் ( காமராஜ்: ஒரு சகாப்தம் ) இந்த அத்தியாயத்தை நினைவு கூர்ந்த காங்கிரஸ் தலைவர் ஏ. கோபண்ணா, மாநிலத்திற்கு இரண்டு பெயர்களைப் பயன்படுத்துவது குறித்து சிலர் கொண்டிருக்கக்கூடிய சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதற்காக சி.எஸ் ஜெர்மனியின் உதாரணத்தைக் குறிப்பிட்டதாகக் குறிப்பிடுகிறார். உலகம் முழுவதும், ஐரோப்பிய நாடு ஜெர்மனி என்று அழைக்கப்படுகிறது, அதே நேரத்தில் ஜெர்மானியர்கள் தங்கள் நாட்டை ஜெர்மனி என்று அழைக்கிறார்கள்..

எனவே தமிழ்நாடு என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டது அப்பொழுதுதான்.

அதன் பின்,

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அண்ணாதுரை அவர்களால் 1968 ஆம் ஆண்டு சட்டபூர்வமாக தமிழ்நாடு என்னும் பெயர் அங்கீகரிக்கப்பட்டது.பின் 1969 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு என அதிகாரப்பூர்வமானது.

வரலாறு இப்படி இருக்க தமிழ்நாடு என்னும் பெயர் சூட்டுதலை ஒரேடியாக திமுகவிற்கு மட்டுமான வரலாறாக இங்கே மாற்றி இருப்பது  தவறு.

ஆகவே தமிழ்நாடு என்னும் பெயர் சூட்டலுக்கு அண்ணாதுரைக்கு முன்பே பல முன்னோடிகள் உள்ளனர் என்பது தான் நிதர்சனம்.

ஆகவே அண்ணாதுரைக்கும் அதில் பங்கு உண்டு என்று தான் சொல்ல வேண்டுமே தவிர , அதன் முழுப் பெருமையும் திமுக எடுத்துக் கொள்வது நியாயமாகாது.

-மன்னை செந்தில் பக்கிரிசாமி

 

Leave a Reply