Home>>அரசியல்>>திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளுக்கு நேரில் சென்று உதவிய திருமதி. பிரேமலதா விஜயகாந்த்!
அரசியல்செய்திகள்தமிழ்நாடு

திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளுக்கு நேரில் சென்று உதவிய திருமதி. பிரேமலதா விஜயகாந்த்!

கடந்த சிலர் நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் தென்மாவட்ட மக்கள் பலர் தங்கள் உடமைகளை இழந்துள்ளனர், பல உயிர்களையும் இழந்துள்ளார்கள். இந்த நேரத்தில் அவர்களுக்கு பல தரப்பில் இருந்தும் தன்னார்வலர்கள் உதவி வரும் நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (20.12.2023) தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அவர்களின் பாதிப்புகளை கேட்டறிந்தார்.

மேலும் அவர்களுக்கு ஆறுதல் கூறி திருநெல்வேலி நகர பகுதி மக்களுக்கு சுமார் ஐந்தாயிரம் பேருக்கு பிரியாணி – தண்ணீர் பாட்டில், பிரட், பிஸ்கட், போர்வை போன்ற தேவையான பொருட்களை மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களுடன் இணைந்து வழங்கினார்கள்.


செய்தி உதவி:
திரு. கார்த்திகேயன்,
மன்னார்குடி.

(தேமுதிக – தலைமை கழகம்
கோயம்பேடு, சென்னை – 107
பகிரி: 9025111314)

Leave a Reply