Home>>அரசியல்>>தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்திட வேண்டி போராட்டம்
அரசியல்காவல்துறைசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மாவட்டங்கள்வேலைவாய்ப்புவேளாண்மை

தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்திட வேண்டி போராட்டம்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் கடை வீதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கீழ்க்கண்ட கோரிக்கைகளுக்காக சாலை மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது.

1. கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் பல்லாயிரம் கணக்கான நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்திடு.

2. கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்கு உடனுக்குடன் அனுப்பிவிடு.

3. சேமிப்புக் கிடங்குகளில் நெல் மூட்டைகளை இறக்க கொள்முதல் நிலையங்களில் உள்ள ஊழியர்களை பயன்படுத்தாதே.

4. ஈரப்பதம் சதவிகிதம் 17லிருந்து 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்திடு.

5. கொள்முதல் நிலையங்களில் தட்டுப்பாடு இன்றி சாக்குகளை வழங்கிடு.

6. நாள் ஒன்றுக்கு 800 சிற்பம் என்ற அளவிலிருந்து உயர்த்தி 1000திற்கு மேல் கொள்முதல் செய்திடு.

இந்த சாலை மறியல் போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய தலைவர் கே எம். அறிவுடைநம்பி, ஒன்றிய செயலாளர் பி.சௌந்தர்ராஜன், ஒன்றிய பொருளாளர் எம்.ஆர்.முருகேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கோரிக்கைகளை விளக்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டூர் ஒன்றிய செயலாளர் எம்.செந்தில்நாதன், மு.ஒன்றிய பெருந்தலைவர் என்.மணிமேகலை, கட்சியின் துணை செயலாளர்கள் பி.பரந்தாமன், எம்.சிவசண்முகம் ஆகியோர் பேசினார்கள்.

சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வட்டாட்சியர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கோட்டமேலாளர் ஆகியோர் போராட்டக்காரர்களிடம் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக கூறியதன் பேரில் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.


தகவல் உதவி:
தோழர் ஜிடி. இராமலிங்கம்.

Leave a Reply