Home>>இலக்கியம்>>மன்னை ராஜேஷின் கவிதைகள்
இலக்கியம்கவிதை

மன்னை ராஜேஷின் கவிதைகள்

தெருவோர நாயிடம்
பயம் கொள்கிறது
பணக்காரன் வீட்டிற்குள்
வளர்த்த சிங்கம்.

—-

மலையொத்த மதில்மோதி
வீசும் காற்று உங்கள்
மனம் குளிர செய்கிறது
என்றால் அது
எங்கள் மன்னையாக இருக்கும்…

—-

அமீரகத்தின் அந்தி வான
சூரியன்
அவள் நெற்றி பொட்டை
நினைவூட்ட மறப்பதில்லை…

—-

கூண்டு கிளிகளின்
குஞ்சிகளுக்கும்
சிறகுகள் இருக்கின்றன..!!

—-

கொஞ்சல் மொழிபேசும்
தங்கமகளின்
பிஞ்சிகைகள்
அள்ளிதருவது
அன்னமா..???
அமுதமா ..??

—-

இறகு முளைத்த ஈசல்கள்
போலதான்
ஏழைகளின் ஆசையும்…

ஓலை குடிசைக்குள்
உண்டான ஓடையில்
கப்பல் விட்டு களித்த சிறுபிள்ளைக்கு கார்முகில்
வரமா…?
சாபமா….?

—-

விருட்சமாகும் விதைகள்
சைவமெனில்
முட்டையும் சைவமே…


மன்னை ராஜேஷ்
(அமீரகத்தில் இருந்து)

படஉதவி: @sarandywestfall_photo

Leave a Reply