Home>>அரசியல்>>பேரிடர் காலத்தை எதிர்க்கொள்ள உள்ள புதிய அரசு
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

பேரிடர் காலத்தை எதிர்க்கொள்ள உள்ள புதிய அரசு

வட இந்தியா ஒன்றியத்தில் தான் இந்த ஆக்சிஜன் பிரச்சினை, இது தமிழ் மொழிக்குடும்ப மண். சிறப்பான கட்டமைப்பை தமிழ் மொழிக்குடும்ப அரசியல் உருவாக்கி உள்ளது என்று வெறுமனே வாய்ச்சவடால் பேசும் காலத்தை கடந்து விட்டோம். தமிழ்நாட்டில் தினம் சுமார் 20000 பேருக்கு கொரோனா பரவுகிறது என்று புள்ளி விவரங்கள் சொல்கிறது. மிகவும் மோசமான இக்கட்டான சூழலில் நாம் உள்ளோம்.

புதிதாக பதவியேற்கும் திமுகக்கு இருக்கக்கூடிய மிகப்பெரும் சவால் இந்த கொரோனா தான். எனவே அவசரப்பட்டு இலவசம் என்ற பெயரில் கருவூலத்தில் இருக்கின்ற கொஞ்ச நஞ்ச நிதியை யும் காலி செய்யாமல் மருத்துவ சிகிச்சைக்காக, ஆக்சிசன் தேவைக்காக பயன்படுத்த சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். இலவசங்கள் நிலமை கட்டுக்கும் வந்த பிறகு இன்னும் ஒரு வருடம் கழித்துக் கூட கொடுத்துக்கொள்ளலாம். இன்றைய அவசியத்தேவை மருத்துவமே. இலவசங்களுக்கு நிதி ஒதுக்கி விட்டு பின்னாளில் மருத்துவ தேவைக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டால் அது உங்கள் ஆட்சிக்கு பெரும் இழுக்கு.

அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதே சிறந்தது. கடந்த அதிமுக ஆட்சி போல இல்லாமல் ஒன்றிய அரசிடம் கடுமையாக வலியுறுத்தி GST நிலுவைத்தொகைகளை பெற முயலுங்கள். தொடர் அழுத்தம் அவர்களுக்கு கொடுங்கள். கடந்த 10 ஆண்டுகளாக அரசு கருவூலத்தில் இருந்து பெருமளவு நிதியை எடுத்து பயன்படுத்தி இருப்பார்கள். எனவே உடனே நிதி மேலாண்மையை கையாளுவது என்பது மிகக்கடினமே. இருந்தாலும் இது ரொம்ப மோசமான நிலைமை. எப்பாடுப்பட்டாவது இந்த நெருக்கடியை சிறப்பாக கையாண்டு தான் ஆக வேண்டும்.

பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றம் இரண்டிலும் நீங்கள் தான் தமிழ்நாடு சார்பாக நிறைந்து உள்ளீர்கள். இது ஒரு நல்ல வாய்ப்பு உங்களுக்கு.

மேலும் தமிழ் நாட்டில் Sterlite தவிர ஆக்சிசன் தயாரிக்க என்ன என்ன வழிகள் உண்டு என்பதையும் ஆலோசியுங்கள். உங்கள் கட்சியை சேர்ந்த திருச்சி சிவா அவர்கள் சொல்படி திருச்சி BHELலில் ஆக்சிசன் உற்பத்தி தொடங்க ஆவண செய்யுங்கள். மணிக்கு 140 மெட்ரிக் டன் ஆக்சிசன் உற்பத்தி செய்யும் வசதி அங்கே உள்ளதாக தொழிற்சங்கம் கூறுகிறது.

கடும் சவால் தான். ஆனால் அதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.


கட்டுரை:
செந்தில் பக்கிரிசாமி,
மன்னார்குடி.

Leave a Reply