Home>>அரசியல்>>இராசகோபாலசாமி கோவிலில் விரைவில் குடமுழுக்கு திருப்பணிகள் நடைபெறும்.
அரசியல்ஆன்மீகம்செய்திகள்தமிழ்நாடு

இராசகோபாலசாமி கோவிலில் விரைவில் குடமுழுக்கு திருப்பணிகள் நடைபெறும்.

மன்னார்குடி பெரிய கோவில் கோபுரத்தில் செடிகள் பெரிதாக வளர்ந்து வருவதை உரிய துறை கண்டுகொள்ளவில்லை என்று சமூக ஊடகத்தில் தொடர்ந்து பல பதிவுகள் வந்தால், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. TRB. ராஜா அவர்கள் சமூக ஊடகத்தில் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். அதை தங்கள் பார்வைக்கு கீழே பகிர்ந்துள்ளோம்.


நேற்று சிலர் பரப்பியிருக்கும் விசமச் செய்திக்கு இதுவே கடைசி எச்சரிக்கை. இனி உண்மை நிலவரம் தெரியாமல் பொய்யான தகவல்களை பரிமாறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். சூலை மாதத்தில் ராசகோபாலசுவாமி திருக்கோவிலில் பணிமுடிக்கபட்டு எடுக்கப்பட்ட புகைப்படம்.

இப்பொழுது இந்த மழை ஈரத்தில் பணி செய்தால் சுதை வேலைப்பாடுகள் நொறுங்கும் அபாயம் உண்டு. மேலும் பணிபுரிபவர்களும் கீழே விழும் அபாயமும் உண்டு!!! எனவே அரசு அதிகாரிகள் மீது வீண் பழி சுமத்தி அவர்களது பணியை சரிவர செய்ய இடையூறு செய்ய முயற்சிக்க வேண்டாம். விரைவில் குடமுழுக்கு திருப்பணிகள் நடைபெறும்.


திரு. TRB. ராஜா,
சட்டமன்ற உறுப்பினர்,
மன்னார்குடி.

Leave a Reply