Home>>அரசியல்>>முன்பெல்லாம் வெளியூருக்கு செல்லும் போது திருத்துறைப்பூண்டி என்று சொன்னால் கம்யூனிஸ்ட் கட்சி பகுதியா என்பார்கள்.
அரசியல்செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மாவட்டங்கள்

முன்பெல்லாம் வெளியூருக்கு செல்லும் போது திருத்துறைப்பூண்டி என்று சொன்னால் கம்யூனிஸ்ட் கட்சி பகுதியா என்பார்கள்.

முன்பெல்லாம் வெளியூருக்கு செல்லும் போது திருத்துறைப்பூண்டி என்று சொன்னால் கம்யூனிஸ்ட் கட்சி பகுதியா என்பார்கள், இப்போது நமது மாவட்டத்தை தாண்டி எங்கு சென்றாலும் திருத்திறைப்பூண்டி என்றால் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தொகுதியா என்கிறார்கள் என பிரபல சமூக சேவகர் எடையூர் மணிமாறன் பரபரப்பு பேச்சு.

திருத்துறைப்பூண்டியில் அசோகசக்ரா போட்டித் தேர்வு மையம் தொடக்க விழா 12/12/2021 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் திரு க.மாரிமுத்து அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

திருத்துறைப்பூண்டி ஒன்றிய பெருந்தலைவர் அ.பாஸ்கர் முன்னிலையிலும் முன்னால் நகர்மன்ற தலைவர் ஆர்எஸ்.பாண்டியன் தலைமையிலும் நிகழ்ச்சியில் முன்னதாக பாரதமாதா சேவை நிறுவனர் எடையூர் ஆர்.வி.மணிமாறன் அவர்கள் வரவேற்று பேசும் போது “திருத்துறைப்பூண்டியின் அடையாளம் பொதுவுடைமை, பொதுவுடைமையின் அடையாளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து, முன்பெல்லாம் வெளியூருக்கு செல்லும் போது திருத்துறைப்பூண்டி என்று சொன்னால் கம்யூனிஸ்ட் கட்சி பகுதியா என்பார்கள், இப்போது நமது மாவட்டத்தை தாண்டி எங்கு சென்று திருத்திறைப்பூண்டி என்றாலும் மாரிமுத்து எம்எல்ஏ தொகுதியா என்கிறார்கள், தோழர் மாரிமுத்து அவர்கள் நமது தொகுதியின் அடையாளமாகிவிட்டார்” என புகழாரம் சூட்டி பேசினார்.


செய்தி உதவி:
தோழர் கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.

Leave a Reply