இன்று (08/08/2020) காலை 10 மணி அளவில் மன்னார்குடியில் உள்ள பெரியார் சிலை அருகில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு (EIA 2020), தேசிய மீன்வள கொள்கை மற்றும் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் 2020, புதிய தேசிய கல்விக் கொள்கை, இடஒதுக்கீடு கொள்கையில் நடுவண் அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தை நாம் தமிழர் கட்சியினர் நிகழ்த்தினார்கள்.
அதற்கு திருவாரூர் (தெற்கு) மாவட்ட செயலாளர் இராம. அரவிந்தன் அவர்கள் தலைமை வகித்தார். மன்னார்குடி தொகுதி செயலாளர் வேதா பாலா, சுற்றுச்சூழல் பாசறையில் இருந்து கருவை கார்த்திகேயன், தொகுதி தலைவர் தி.பா.சரவணன், தொகுதி பொருளாளர் ஜோசப்தினேஷ் போன்றோர் முன்னிலை வகித்தார்கள்.
மற்றும் ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பி.காளியம்மாள், மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. சாகுல் அமீது அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டது…
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு EIA 2020வை திரும்பப் பெற வேண்டும்.
தேசிய மீன்வள கொள்கை மற்றும் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் 2020 திரும்பப் பெற வேண்டும்.
புதிய தேசிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக திரும்ப பெற வேண்டும்.
இடஒதுக்கீடு கொள்கையில் நடுவண் அரசு மக்களுக்கு விரோதமாக செயல்பட கூடாது.
ஆர்ப்பாட்டத்தில் மேலே உள்ள கோரிக்கைகள் ஒருபுறம் முன்வைக்கப்பட்டாலும், மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் பொது மக்களுக்கு சுமார் 500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

செய்தி உதவி:
காஞ்சி சு. பாலமுருகன்
செய்தி தொடர்பாளர்
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி



