Home>>செய்திகள்>>மன்னார்குடி நகராட்சியில் துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.
செய்திகள்தமிழ்நாடு

மன்னார்குடி நகராட்சியில் துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி நகராட்சியில் துப்புரவு தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாட்களாக வேலை நிறுத்தம் செய்துள்ளார்கள்.

கீழ்க்கண்ட கோரிக்கைகளை அவர்கள் தரப்பில் இருந்து மன்னார்குடி நகராட்சி நிர்வாகத்திற்கு முன் வைக்கிறார்கள்.

  • ஊதிய ஊயர்வு.
  • கொரானா காலத்தில் அறிவித்த சிறப்பு ஊதியம் இன்னு தரவில்லை.
  • சீருடைகள் இல்லை.
  • அடையாள அட்டைகள் இல்லை.
  • மழைகாலங்களில் பணிபுரிய போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை.

இவற்றை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் துப்புரவு தொழிலாளர்களை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமால், புதிதாக ஆட்களை தற்காலிக பணிக்கு அமர்த்தியும் கனரக வாகனங்களை வைத்தும் சுத்தும் செய்து வருகின்றனர்.

பேரிடர் காலங்களில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், மக்களை காக்க வேண்டி அயராது உழைத்தவர்களின் கோரிக்கைகளை மன்னார்குடி நகராட்சி விரைவில் ஏற்றுக்கொண்டு தீர்வு வழங்க வேண்டும். அதுவே அவர்களுக்கு தரும் உரிய அங்கீகாரமாகும்.


செய்தி சேகரிப்பு:
பிரசன்னா, மன்னார்குடி.

Leave a Reply