Home>>செய்திகள்>>மத்திய அரசு வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.
செய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

மத்திய அரசு வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.

மத்திய அரசு வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் விவசாயிகள் மீது தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் உடனடி பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் முன்வரவேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.


தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட அமைப்பின் சார்பில் சார்பில் டெல்லியில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் போராட்டத்திற்கு ஆதரவு தந்து திருவாரூர் ரயில் நிலையம் முன் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் முற்றுகை போராட்டம் இன்று 28 11 2020 அன்று நடைபெற்றது. போராட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பி.ஆர் -பாண்டியன் தெரிவித்ததாவது. மத்திய அரசாங்கம் மோடி பொறுப்பேற்றது முதல் விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது தமிழக விவசாயிகளுக்கு எதிராகவும் பேரழிவு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இந்நிலையில் புதிய வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் என்கிற பெயரில் விவசாயத்தை அழிக்கக்கூடிய திட்டங்களை சட்டமாக்கி பிரதமர் அறிவித்திருக்கிறார்.

கொரோனா கொடிய தாக்குதலில் ஒட்டுமொத்த உலகமும் முடங்கி இருந்த நிலையில் பாராளுமன்றத்தில் அவசரகால கூட்டத்தில் ஒரு சில மணி நேரங்கள் மற்றும் விவாதித்ததாக ஒத்த கருத்தோடு நிறைவேறியதாக பொய்யான தகவலை சொல்லி குடியரசுத் தலைவரிடம் மோசடியாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இந்த சட்ட மூலம் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயத்தை மத்திய அரசு முற்றிலும் கைவிட்டு நெல் கோதுமை கொள்முதல் செய்வதை முற்றிலும் கைவிட முயற்சிக்கிறது.

வேளாண் வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்துவதற்கு நிதி பெறுகிறோம் என்ற பெயரில் உலக பெருமுதலாளிகள் நிதியை பெறுவதற்கான அனுமதி வழங்குகிறது. ஆன்லைன் டிரேட் என்கிற பெயரில் உலக வர்த்தக சூதாடிகளை சட்டம் போட்டு அனுமதிக்கிறது. இந்த சட்டம் விவசாயிகளை பேரழிவு கொண்டு செல்வதோடு வணிகர்களையும் ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் சட்டமாகும்.

இந்த சட்டம் அமுலுக்கு வரும் நிலையில் வருகிற பிப்ரவரி மாதம் பாராளுமன்ற பட்ஜெட்டுக்கு பிறகு தமிழ் நாட்டிலும் நெல் கொள்முதல் முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும். எனவே ஒட்டுமொத்த விவசாயத்தை அளிக்கக்கூடிய இந்த சட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் ஆதரவு அளித்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு மட்டுமின்றி முன்னாள் முதலமைச்சர் அம்மா ஜெயலலிதா அவர்களுக்கும் செய்கின்ற மிகப் பெரிய துரோகம் இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். முதலமைச்சர் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்கு காவிரி உரிமையை மீட்டுக் கொடுத்ததோடு காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சட்டமே குழிதோண்டிப் புதைக்கும் வகையில் இன்றைக்கு இந்த வேளாண் சட்டம் வழிவகுக்கிறது.

உண்மை நிலையை தெரிந்து பஞ்சாப் ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் எதிர்த்து வருவதை பின்பற்றி,அதன் அடிப்படையில் தமிழக அரசும் இந்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தைக் கூட்டி நிறைவேற்ற வேண்டும். தமிழக அமைச்சரவை கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

தேவையானால் தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி வேளாண் சட்டம் குறித்து விவாதிக்க முன் வரவேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். இதனை மறுக்கும் பட்சத்தில் தமிழக முதலமைச்சருக்கு எதிராக தமிழக விவசாயிகள் போராட தயங்க மாட்டோம் என எச்சரிக்கிறேன்.

பிரதமர் மோடி அவர்கள் போராடுகிற விவசாயிகளை அழைத்து பேசி வருகிற 3ம் தேதி தீர்வு காணுவார், அன்றைய தினம் இந்த சட்டத்தை திரும்பப் பெறுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மறுக்கும் பட்சத்தில் டெல்லி போராட்டத்தில் தமிழக விவசாயிகளும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளும் ஒன்றுபட்டு மோடி அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம் என எச்சரிக்கிறேன் என்றார்.

முன்னதாக மத்திய அரசினுடைய வேளாண் விரோத சட்ட நகலை விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்தினர். போராட்டத்திற்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை ஏற்றார். மாநில துணை தலைவர் ஜி வரதராஜன் துணை செயலாளர் எம். செந்தில்குமார், மாவட்ட தலைவர் எம் சுப்பையன் உள்ளிட்ட அனைத்து ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

முகநூல் பதிவு முகவரி: https://www.facebook.com/permalink.php?story_fbid=2834191066861460&id=100008117832439


செய்தி தொடர்பாளர்,
என்.மணிமாறன்.

Leave a Reply