இன்று (12/12/2020) காலை மன்னார்குடியில், காவிரி உரிமை மீட்புக் குழுவினர் ஐயா மருத்துவர் பாரதிசெல்வன் தலைமையில் சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் முறியடிக்கும் விதமாக மறியலில் ஈடுபட்டு, தலைமை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
இதில் பல உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புற உழவர்கள் கலந்துக்கொண்டு போராட்டத்தை வலுப்படுத்தினார்கள்.
—
செய்தி சேகரிப்பு:
நிரஞ்சன், மன்னார்குடி.
























