Home>>தமிழ்நாடு>>ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் மன்னையின் மைந்தர்கள் சார்பாக முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்நாடுமன்னார்குடிவேளாண்மை

ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் மன்னையின் மைந்தர்கள் சார்பாக முன்னெடுக்கப்பட்டது.

மன்னையின் மைந்தர்கள் மண்ணின் மாற்றத்தை நோக்கி என்ற வாசகத்தை விதையாக எங்கள் சிந்தையில் விதைத்த ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் மற்றும் உறுதிமொழி நிகழ்வு இன்று (30/12/2020) மன்னையின் மைந்தர்கள் சார்பாக முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வு மன்னார்குடியில் உள்ள மன்னை உழவன் உணவகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

விதைத்தவர் உறங்களாம் ஆனால் விதைகள் உறங்காது என்பதை போல, நாம் ஒவ்வொருவரும் விதையாக வீரியமாகி மண்ணை காப்பதற்கும் மக்களை மீட்டெடுக்கவும் பாரம்பரியத்தை பதியமாக்கவும் தற்சார்பு பொருளாதாரத்தை வளர்க்கவும் எந்நேரமும் உழைப்போம் என்று உறுதி ஏற்கப்பட்டது.


செய்தி சேகரிப்பு:
இராசசேகரன், மன்னார்குடி.

Leave a Reply