Home>>அரசியல்>>தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை!
தமிழ்நாடு சட்டமன்றம்
அரசியல்கல்விசெய்திகள்தமிழ்நாடு

தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை!

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் வரவேற்றுள்ளார்.

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:


சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரையில் வேளாண்மைத் துறைக்காக தனியான நிதிநிலை அறிக்கை ஆண்டுதோறும் வழங்கப்படும், தமிழைப் பயிற்சி மொழியாகக் கொண்டுப் படித்த மாணவர்களுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அரசுப் பணிகளில் முன்னுரிமைக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

கடந்த பல ஆண்டு காலமாக மூடப்பட்ட அரசுப்பள்ளிகளை மீண்டும் திறப்பதற்குரிய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

சிங்களக் கடற்படையினால் தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க இந்திய ஒன்றிய அரசு முன்வரவில்லை. எனவே, தமிழக அரசு அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கு முன்வருவது பற்றி எதுவும் அறிவிக்கப்படாததும் வருந்தத் தக்கதாகும்.


செய்தி சேகரிப்பு:
இராசசேகரன், மன்னார்குடி.

Leave a Reply