Home>>செய்திகள்>>இராஜவளநாடு உடற்பயிற்சி கூடம் வெற்றிகரமாக திறக்கப்பட்டது.
இராஜவளநாடு உடற்பயிற்சி கூடம் வெற்றிகரமாக திறக்கப்பட்டது.
செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவிளையாட்டு

இராஜவளநாடு உடற்பயிற்சி கூடம் வெற்றிகரமாக திறக்கப்பட்டது.

மன்னார்குடி தாலுகா நெடுவாக்கோட்டை கிராமத்தில் 28.02.2020 அன்று தொடங்கப்பட்ட இராஜவளநாடு இளைஞர் நற்பணி மன்றம் அக்கிராமத்தில் உடற்பயிற்சி கூடம் அமைக்க முடிவு செய்து 03.08.2020 அன்று பூமி பூசை போடபட்டு பணிகள் தொடங்கியது. கட்டும் பணிகள் நிறைவடைந்து கடந்த வியாழன் 16.09.2021 அன்று இராஜவளநாடு உடற்பயிற்சி கூடம் வெற்றிகரமாக திறக்கப்பட்டது.

இந்த உடற்பயிற்சி கூடம் நெடுவாக்கோட்டை, மன்னார்குடி உள்ளிட்ட ஊர்களின் மக்கள் & முக்கிய புள்ளிகளிடம் தொகை வசூல் செய்து கட்டப்பட்டது. இது அனைத்து பகுதி மக்களுக்குமான ஒரு உடற்பயிற்சி கூடம். இதன் நுழைவு கட்டணம் ரூ.500 மாத சந்தா ரூ.200.

தேசிய அளவில் & ஒன்றிய அளவில் பதக்கம் வென்றவர்களுக்கு அனைத்தும் இலவசம். இந்திய ஒன்றிய அளவில் கலந்துகொள்ள செல்வோருக்கான செலவை இராஜவளநாடு உடற்பயிற்சி கூடம் எடுத்துக்கொள்ள தயாராக இருக்கிறது.


நிரஞ்சன்,
மன்னார்குடி.

Leave a Reply