Home>>சமூக பணி>>மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய உதவிய கரிசவயல் உதவும் கரங்கள்
கரிசவயல் உதவும் கரங்கள்
சமூக பணிதமிழ்நாடு

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய உதவிய கரிசவயல் உதவும் கரங்கள்

நமது கரிசவயல் உதவும் கரங்கள் அமைப்பின் சார்பில் கடந்த மாதம் செருபாலக்காட்டைச் சேர்ந்த லதா என்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமாக உள்ளார்.

வீடில்லாமால் தவித்துவந்த அவருக்கு நமது உதவும் கரங்களின் செய்தி எதிரொளியாக நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் நலசங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடத்தில் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை உடனடியாக பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் திரு.அமல் ஸ்டாலின் பீட்டர் பாபு அவர்களின் மூலம் மாற்றுத்திறனாளி பெண்மணிக்கு வீடு கட்டி கொள்வதற்கு ரூ.50000 முதல் கட்டமாக வழங்கிய தொகையை உயர்திரு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அந்த பெண்ணிடம் நேரடியாக வழங்கினார்.

வீடுகட்ட இடம் வழங்கிய திரு.தாஜுதீன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பொண்ணாடை போர்த்தி கவுரவித்தார்.

நிதியுதவி அளித்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும். இந்த நிதியுதவிக்கு பெரும் முயர்ச்சியெடுத்த உதவும் கரங்களுக்கும் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் நல முன்னேற்ற சங்கத்திற்கும், லதா நன்றி தெரிவித்துக்கொண்டார்.


செய்தி உதவி:
சகோதரர் இப்ராகிம்,
பேராவூரணி.

Leave a Reply