Home>>காவல்துறை>>தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே ஆணவ படுகொலை
வேட்டமங்கலம் பிரபாகரன்
காவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே ஆணவ படுகொலை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம், காட்டுமிராண்டி செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளையும் இதன் பின்னனியில் உள்ள அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை வேண்டும் என தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி வலியுறுத்தல்.

இந்த விவகாரம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் மு.அ. பாரதி வெளியிட்டுள்ள செய்தி பின் வருமாறு:

பிரபாகரன் ஆணவப் படுகொலையின் பின்னணியில் உள்ள அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே உள்ள வேட்டமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் பிரபாகரன் காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவ மணிகண்டன் என்பவரது மகளும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரபாகரனை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனை தடுக்க முயன்ற பிரபாகரனின் சகோதரர் விக்னேஷ் என்பவரும் படுகாயம் அடைந்துள்ளார். கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பிரபாகரன் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்துள்ள விக்னேஷ் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை வ்டக்கு மாவட்டக்குழு சார்பில் கேட்டுகொள்கிறோம் என வலியுறுத்தி உள்ளார்.


செய்தி உதவி:
தோழர். கா. லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.

Leave a Reply