Home>>செய்திகள்>>தமிழ்நாடு முதலமைச்சருடன் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் எம்.செல்வராஜ் சந்திப்பு
செய்திகள்தமிழ்நாடுபோக்குவரத்து

தமிழ்நாடு முதலமைச்சருடன் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் எம்.செல்வராஜ் சந்திப்பு

திருவாரூர் – காரைக்குடி மார்க்கத்தில் புதிய தொடர்வண்டி சேவைகள் தொடங்கிட ஒன்றிய அரசை வலியுறுத்தக்கோரி மனு கொடுத்துள்ளார்.

நாகை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எம்.செல்வராஜ் அவர்கள் இன்று (12/10/2021) மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர் அவர்களை நேரில் சந்தித்து திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வழியாக திருவாரூர் – காரைக்குடி மார்க்கத்தில் தொடர்வண்டி சேவைகள் தொடங்கிட ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டி கோரிக்கை மனு அளித்தார்.

முதல்வருடான சந்திப்பு குறித்து நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் அவர்களிடம் தொடர்பு கொண்ட போது திருவாரூர் காரைக்குடி மார்க்கத்தில் கேட் கீப்பர்கள் பணியமர்த்தாமலும் புதிய ரயில் சேவைகள் தராமல் இருப்பது குறித்தும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. பழனி மாணிக்கம், திரு. திருநாவுக்கரசர், திரு. நவாசுகனி, திரு. கார்த்தி சிதம்பரம் ஆகியோருடன் இணைந்து சென்று மனு கொடுத்ததையும் சுட்டிக் காட்டியதாகவும் கூறினார். மேலும் மாண்புமிகு முதல்வர் விரைவில் தீர்வு காணப்படும் உறுதியளித்தமைக்கு நன்றி கூறியதாகவும் கூறினார்.


செய்தி உதவி:
தோழர் கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.

Leave a Reply