Home>>செய்திகள்>>தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கம் முத்துப்பேட்டை கிளையில் 6வது வட்டப் பேரவை
தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கம் முத்துப்பேட்டை கிளையில் 6 வது வட்டப் பேரவை
செய்திகள்தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கம் முத்துப்பேட்டை கிளையில் 6வது வட்டப் பேரவை

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம், முத்துப்பேட்டை கிளையில் 6வது வட்டப் பேரவை நடைபெற்றது. இதை திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் தொடங்கி வைத்தார்.

இன்று (13/10/2021) முத்துப்பேட்டை புதுத்தெரு பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள சங்கத்தின் 6 வது வட்டப் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதனை திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து அவர்கள் தொடங்கி வைத்தார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் குரு.சந்திரசேகர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

சங்கத்தின் முத்துப்பேட்டை கிளை தலைவர் கோவி.ரெங்கசாமி தலைமையில் நடைபெற்ற பேரவை கூட்டத்தில் கிளை துணைத்தலைவர் எம்ஆர்.சுப்பிரமணியன் வரவேற்புரையாற்ற கிளை துணைச்செயலாளர் ராமஜெயம் நன்றியுரையாற்றினார். சி.செல்லத்துரை, கே.அண்ணாதுரை ஆகியோர் அறிக்கை சமர்பித்தனர்.


செய்தி உதவி:
தோழர் கா.லெனின்பாபு,
13/09/2021

Leave a Reply