Home>>செய்திகள்>>சுவர் இடிந்து விழுந்து இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் பெற்று தந்த திரு. க.மாரிமுத்து
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து
செய்திகள்தமிழ்நாடு

சுவர் இடிந்து விழுந்து இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் பெற்று தந்த திரு. க.மாரிமுத்து

கோட்டூர் அருகே சுவர் இடிந்து விழுந்த இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் பெற்று தந்த தோழர் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி நன்றி தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 83 குலமாணிக்கம் ஊராட்சி கிராமத்தில் வசித்து வந்த விவசாய கூலித் தொழிலாளியான மாரிமுத்து என்பவரும் அவரது மனைவி சுந்தரம்பாள் இருவரும் தங்களது கூரை வீட்டில் உறங்கி கொண்டு இருந்த போது (18/10/2021) அன்று இரவு 9 மணி அளவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக பக்கத்து வீட்டு சுவர் இடிந்து விழுந்த்தில் குடியிருந்த (1) மாரிமுத்து த/பெ. சுப்பன் என்பவர் பலியானார்.

பலியான விவசாய தொழிலாளியின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் கிடைக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தும், மாவட்ட ஆட்சியரக குறை தீர்ப்பு கூட்டத்தில் வலியுறுத்தியதோடு தமிழ்நாடு அரசு மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றை தொடர்பு கொண்ட வண்ணம் இருந்து உரிய நிவாரணம் விரைவாக கிடைக்க முயற்சி மேற்கொண்டார். இதனை அடுத்து ரூ.4லட்சம் நிவாரணம் வழங்கபட்டது.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கோட்டூர் ஒன்றிய துணைச் செயலாளர் சிற்றசன் அவர்கள் திரு. க.மாரிமுத்து அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் விசிக நிர்வாகி விடுத்துள்ள செய்தியில் ‘பாதிக்கபட்ட குடும்பத்திற்கு தொடர் முயற்சி காரணமாக ரூ.4 லட்சம் நிவாரணம் விரைவாக பெற்றுத்தந்த திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் சார்பில் நன்றி’ என தெரிவித்திள்ளார்.


தோழர். கா.லெனின்பாபு
திருத்துறைப்பூண்டி.

Leave a Reply